மோகன்தாசு கரம்சந்த் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அஆ (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
வரிசை 1:
<div style="float:right; margin-left:1em;">[[படிமம்:Maghandi.jpg|Mohandas Gandhi]]</div>
'''மோகன்தாஸ் கரம்சந் காந்தி''', "மகாத்மா காந்தி" என்று மரியாதையாக மக்களால் அழைக்கப்படுகிறார். [[இந்திய விடுதலைப் போராட்டம்|இந்திய விடுதலைப் போராட்டத்தை]] இவர் தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தியதன் காரணமாக இவர் "சுதந்திர [[இந்தியா]]வின் தந்தை" எனப்படுகிறார். [[சத்தியாகிரஹம்]] என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப்போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிாவகுத்ததோடலல்லாமல் மற்ற நாட்டு விடுதலை இயக்கங்கலுக்கும் ஒரு முன்னோடியாக அமைந்தது.
==பிறப்பும் இளமையும்==
மோகன்தாஸ் காந்தி [[1869]]ஆம் வருடம் அக்டோபர் 2ஆம் நாள் [[இந்தியா|இந்திய]] நாட்டின் [[குஜராத்]] மாநிலத்திலுள்ள [[போர்பந்தர்]] எனுிம் ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் பெயர் கரம்சந்த் காந்தி, தாயார் புத்லிபாய். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூர்பாயை மணந்தார்.
பள்ளிப்படிப்பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார் காந்தி. தனது 19ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பாரிஸ்டர் (barrister) எனப்படும் வழக்குரைஞர் படிப்பிற்காாக காந்தி [[இங்கிலாந்து]] சென்றார். இங்கிலாந்து செல்லும் முன் காந்தி தன் தாயாரிடம் [[புலால் உணவு]]ம் [[மது]]வும் தொடாமல் இருப்பதாக வாக்களித்தார். இங்கிலாந்து சென்ற பிறகு ஆங்கிலேய பழக்க வழக்கங்களால் சற்று கவரப்பட்டாலும் தன் தாய்க்களித்த வாக்கை இம்மியளவும் பிசகாமல் காந்தி காப்பாற்றினார்.
தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி [[பம்பாய்|பம்பாயில்]] சிறிது காலம் வழக்குரைஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான [[ராஜ்கோட்]]டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிமங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் [[தென்னாஃப்ரிக்கா]]விலிருந்த காந்தியின் மறைந்த தந்தையின் நண்பரொருவர், அங்கே காந்தியின் தகுகிக்கேற்ற வேலை ஒன்று காலியிருப்பதாக அவரை அழைத்தார். இவ்வழைப்பை ஏற்ற காந்தி உடனே தென்னாப்பிரிக்கா பயனமானார்.
==தென்னாஃப்ரிக்காவில்==
இச்சமயம் தென்னாஃப்ரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் தலைவிரித்தாடியது. இதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாஃப்ரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்களே அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றியது.
அங்குிள்ள [[டர்பன்]] (Durban) நகரின் நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை அவமதிக்கும் பொருட்டு நீதிமன்றத்தை விட்டு உடனே வெளியேறினார். பிறகொருநாள் [[ப்ரிட்டோரியா]] (Pretoria) செல்வதற்காக தகுந்த பயனச்சீட்டுடன் [[இரயில் வண்டி]]யின் முதல் வகுப்புப்பெட்டியில் பயனம் செய்த காந்தி, வெள்ளையர் அல்லாதவரால் ஒரு ஆங்கிலேய அதிகாரியால் [[பீட்டர்மாரீஸ்பர்க்]] (Pietermaritzburg) இரயில் நிலையத்தில் பெட்டியிலிருந்து தூக்கியெறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாஃப்ரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
[[af:Mahatma Gandhi]]
[[ca:Mohandas Gandhi]]
[[cs:M%C3%B3hand%C3%A1s_G%C3%A1ndh%C3%AD]]
[[da:Mahatma Gandhi]]
[[de:Mahatma Gandhi]]
[[simple:Mahatma Gandhi]]
[[en:Mahatma Gandhi]]
[[es:Mohandas Gandhi]]
[[eo:Mahatma GANDHI]]
[[fr:Mohandas Karamchand Gandhi]]
[[ga:Mahatma Gandhi]]
[[gl:Mahatma Gandhi]]
[[gu:મહાત્મા ગાંધી]]
[[hi:महात्मा गांधी]]
[[id:Mahatma Gandhi]]
[[it:Mohandas Gandhi]]
[[he:מוהנדס קרמצ'נד גאנדי]]
[[hr:Gandhi]]
[[hu:Mahatma Gandhi]]
[[kn:ಮಹಾತ್ಮ ಗಾಂಧಿ]]
[[ml:മഹാത്മാഗാന്ധി]]
[[ms:Mahatma Gandhi]]
[[nl:Mahatma Gandhi]]
[[ja:マハトマ・ガンジー]]
[[no:Mohandas Gandhi]]
[[pl:Mohandas Karamchand Gandhi]]
[[pt:Mahatma Gandhi]]
[[ro:Mahatma Gandhi]]
[[ru:Ганди, Мохандас Карамчанд]]
[[sa:मोहनदास करमचन्द गान्धी]]
[[scn:Mahatma Gandhi]]
[[sk:Móhandás Karamčand Gándhí]]
[[sl:Mahatma Gandhi]]
[[sq:Mahatma Gandhi]]
[[sr:Махатма Ганди]]
[[fi:Mohandas Gandhi]]
[[sv:Mohandas Karamchand Gandhi]]
[[th:มหาตมะ คานธี]]
[[zh:圣雄甘地]]
|