ஆரியர் (சங்ககாலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
ஆரியர் என்னும் சொல் சங்கப்பாடல்களில் யாரைக் குறிக்கிறது என்பதைக் காண்பது இந்தத் தொகுப்பு.
 
[[இமயமலை|இமயமலைச்]] சாரலில் வாழ்ந்த குடிமக்கள் ஆரியர். <br />
[[கங்கை ஆறு|கங்கைப்]] பெருவெளியில் ஆண்ட அரசர்குடி [[மோரியர்]]. <br />
சங்கப்பாடல்கள் தரும் இந்தத் தெளிவான குறிப்பினை உள்ளத்தில் கொண்டு இந்தச் செய்திகளை அணுக வேண்டும்.
 
[[சேரன் செங்குட்டுவன்]] வென்ற கனக, விசயர் வடபுலத்து அரசர். அதாவது இமயச் சாரல் வடபுலத்து அரசர். <br />
மோரியரையோ, [[நந்தர்|நந்தரையோ]] அன்று.
 
சேர அரசன் [[இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்]] ஆரியர் வாழும் இமயமலை மலையில் தன் வில்லம்புச் சின்னத்தைப் பொறித்தான். வணங்குவில் என்னும் தொடர் அம்புடன் வளைந்திருக்கும் வில் என்பதைக் காட்டுகிறது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை இமயம் – [[பதிற்றுப்பத்து]] 11</ref>
<ref>பேரிசை மரபின் ஆரியர் வணக்கி பதிற்றுப்பத்து பதிகம் 2,</ref>
<ref>ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்றுமுதிர் வடவரை வணங்குவில் பொறித்து, வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி - அகநானூறு 396 [[பரணர்]]</ref>
 
சோழரும், ஆரியரும் தாக்கிக்கொண்ட போர் [[வல்லம்]] என்னும் ஊருக்குப் புறத்தே இருந்த காவல் காட்டில் நடந்தது. அதில் ஆரியர் படை உடைந்து திரும்பி ஓடிவிட்டது. <ref>மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என் தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 [[பாவைக் கொட்டிலார்|பாவைக்கொட்டிலார்]]</ref>
 
[[முள்ளூர்]] என்னுமிடத்தில் ஆரியர் வாட்படையுடன் தாக்கினர். மலையன் வில்லெய்து அவர்களை எதிர்கொண்டான். ஆரியர் பலர். [[காரி|மலையன்]] ஒருவன். ஒன்றாலும் வில்லுக்கு எதிர்நிற்க மாட்டாமல் வாட்படை ஓடிவிட்டது. <ref>ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170</ref>
 
பறை முழக்கத்துடன் கயிற்றின்மீது ஏறி ஆடி வித்தை காட்டி ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் – குறுந்தொகை 7 [[பெரும்பதுமனார்]]</ref>
 
பெண்யானைகளைப் பழக்கப்படுத்தி வைத்துக்கொண்டு ஆண்யானைகளைப் பிடித்துப் பயிற்சி அளித்து மன்னர்களுக்கு விற்றும் ஆரியர் தமிழ்நாட்டில் பிழைப்பு நடத்திவந்தனர். <ref>ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல (தலைவனை ஆட்டிப் படைப்பேன் என்கிறாள் ஒரு பரத்தை) – அகநானூறு 276 பரணர்</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆரியர்_(சங்ககாலம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது