திருச்சபைத் தந்தையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
===ரோம் புனித கிளமென்ட்===
{{main|முதலாம் கிளமெண்ட் (திருத்தந்தை)}}
'''ரோம் புனித கிளமென்ட்''' (-கி.பி.97), திருத்தூதர் [[பேதுரு (திருத்தூதர்)|பேதுரு]]வின் சீடர்களுள் ஒருவர் ஆவார். இவர் புனித பேதுருவிடமிருந்து திருப்பொழிவு பெற்று [[உரோமை நகரம்|உரோமை]]யின் ஆயரான இவர், [[கத்தோலிக்க திருச்சபை]]யின் நான்காவது [[திருத்தந்தை]] ஆவார். சுமார் கி.பி.95ல், இவர் கொரிந்தியருக்கு எழுதிய திருமுகம், [[கிறித்தவம்|கிறிஸ்தவ]] விசுவாசத்தை தெளிவாக எடுத்துரைக்கிறது. உரோமைப் பேரரசன் ட்ராஜன் காலத்தில் தம் கிறிஸ்தவ நம்பிக்கையை முன்னிட்டு, கிளமென்ட் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கும் இவர் பிற சிறைக் கைதிகளுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தார். இறுதியாக இவர் ஒரு நங்கூரத்தில் கட்டப்பட்டு, கடலில் ஆழ்த்தி மறைசாட்சியாக கொல்லப்பட்டார்.
 
===அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்===
{{main|அந்தியோக்கு இஞ்ஞாசியார்}}
'''அந்தியோக்கு புனித இஞ்ஞாசியார்''' (-கி.பி.108/115), திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடர்களுள் ஒருவர் ஆவார். அந்தியோக்கியா நகரின் மூன்றாம் ஆயரான இவர், [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் மீதான விசுவாசத்திற்காக கைது செய்யப்பட்டார். இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடிதங்களின் மூலம் தொடக்க கால கிறிஸ்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவர் சிங்கங்களுக்கு இரையாக்கப்பட்டு, [[மறைசாட்சி]]யாக இறந்தார்.
 
===சுமைர்னா புனித பொலிகார்ப்===
'''சுமைர்னா புனித பொலிகார்ப்''' (கி.பி.69-155), திருத்தூதர் [[யோவான் (திருத்தூதர்)|யோவானின்]] சீடர்களுள் ஒருவர். [[இயேசு கிறித்து|கிறிஸ்து]]வின் மீதான விசுவாசத்தில் [[கிறித்தவர்|கிறிஸ்தவர்]]கள் நிலைத்திருக்க இவர் மிகவும் உழைத்தார். சுமைர்னா ஆயரான இவர், உரோமைப் பேரரசன் மார்க்கூஸ் அவ்ரேலியுஸ் ஆட்சியின் ஆறாம் ஆண்டில் எழுந்த கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலவரத்தில் பிடிபட்டார். கிறிஸ்துவைப் பழித்து பேசினால் விடுதலை என்ற ஆசை வார்த்தைகளுக்கு இவர் இணங்கவில்லை. இறுதியாக, பொலிகார்ப்பைத் தீச்சூளையில் இட்டு எரிக்க முயன்றனர். நெருப்பு இவரைத் தீண்டாததால், ஈட்டியால் குத்துண்டு மறைசாட்சியாக உயிர் துறந்தார்
 
==பின்வந்த தந்தையர்==
"https://ta.wikipedia.org/wiki/திருச்சபைத்_தந்தையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது