காரிமங்கலம் வட்டம்

காரிமங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு மற்றும் அரூர் வட்டங்களைச் சீரமைத்து பிரித்து, காரிமங்கலம் பேரூராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 10ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இந்த வட்டத்தின் கீழ் 40 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]இவ்வட்டம் காரிமங்கலம், கம்பைநல்லூர், பெரியனஹள்ளி,என 3 உள்வட்டங்கள் கொண்டது.

இவ்வட்டத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்
  2. "காரிமங்கலம் வட்டம் உருவாக்கம் - அரசாணை" (PDF). Archived from the original (PDF) on 2016-04-07. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரிமங்கலம்_வட்டம்&oldid=3549299" இலிருந்து மீள்விக்கப்பட்டது