சிற்றேவலர் போர் நினைவிடம்

சிற்றேவலர் போர் நினைவுச்சின்னம் (Lascar War Memorial) என்பது கொல்கத்தாவின் கேசுடிங்சு பகுதியில் நேப்பியர் சாலையில் அமைந்துள்ள ஓர் நினைவுச் சின்னமாகும். முதலாம் உலகப் போரின்போது அரச கடற்படை மற்றும் பிரித்தன் வணிக சேவைக் கப்பல்களில் பணியாற்றி இறந்த 896 இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த மாலுமிகளின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.[1] [2] [3]

இலாசுகர் போர் நினைவுச்சின்னம்

சிற்றேவலர் தொகு

ஒரு சிற்றேவலர் (இலசுகர், இலாசுகர்) என்பவர் இந்திய துணைக் கண்டத்திலிருந்தோ அல்லது நன்னம்பிக்கை முனையின் கிழக்கிலிருந்து பிற நாடுகளிலிருந்தோ ஒரு மாலுமி அல்லது போராளி ஆவர். 16 ஆம் நூற்றாண்டு முதல் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை ஐரோப்பிய கப்பல்களில் இவர்கள் பணியாற்றியுள்ளனர். இலாசுகர் என்ற இந்த வார்த்தை பாரசீகத்திலிருந்து வந்தது. அதாவது இராணுவ முகாம் அல்லது இராணுவம், மற்றும் அல்-அஸ்கார், ஒரு காவலர் அல்லது சிப்பாயின் அரபு வார்த்தையாகும். வார்த்தையை இலாஸ்கரிமுக்கு மாற்றியமைத்தனர். அதாவது ஒரு ஆசிய போராளி அல்லது சீமான், குறிப்பாக இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள். 'சிற்றேவலர்கள்' ஒப்பந்தங்களின் கீழ் பிரித்தன் கப்பல்களில் இவர்கள் பணியாற்றினர். இது வழக்கமான ஒப்பந்தத்தை விட கப்பல் உரிமையாளர்களுக்கு அதிக கட்டுப்பாட்டைக் கொடுத்தது. மாலுமிகளை ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றி ஒரே நேரத்தில் மூன்று ஆண்டுகள் வரை சேவையில் தக்கவைத்துக் கொள்ளலாம். பொதுவாக பிரித்தானிய இராணுவ அதிகாரிகளால் ஈடுபடுத்தப்பட்ட இந்திய ஊழியர்களைக் குறிக்க இலாசுகர் என்ற பெயர் பயன்படுத்தப்பட்டது. [4]

வரலாறு மற்றும் கட்டிடக்கலை தொகு

 
சிற்றேவலர் போர் நினைவுச்சின்னத்தின் உள்ளே
 
சிற்றேவலர் போர் நினைவுச்சின்னத்தின் உள்ளே

முதலாம் உலகப் போரின்போது உயிர் இழந்த பிரிக்கப்படாத வங்காளம் மற்றும் அசாமின் 896 மாலுமிகளின் நினைவாக, கப்பல் மற்றும் வணிக நிறுவனங்களால் இந்த போர் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. [5] இந்த நினைவுச்சின்னம் மைதானத்தின் தெற்கு முனையில், நைபர் சாலையில், கேசுடிங்சில், பிரின்செப் காட் அருகே அமைந்துள்ளது. 100 அடி உயர நினைவுச்சின்னம் 1924 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி வங்காள ஆளுநராக இருந்த இலித்தன் பிரபு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. வழக்கமான கிழக்கத்திய பாணியில் கட்டப்பட்ட இந்த நினைவுச்சின்னம் நான்கு பக்க நெடுவரிசைகளைக் கொண்டுள்ளது. இது ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு பழங்கால காட்சிகளின் வலிமையை பிரதிபலிக்கும் வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது. நினைவுச்சின்னத்தின் மேல் பகுதி நான்கு சிறிய மினாரெட்டுகள் மற்றும் ஒரு பெரிய பூசப்பட்ட குவிமாடத்தைக் கொண்டுள்ளது. சஜ்ஜாக்கள் மற்றும் குறுக்கு நெடுக்காக அடிக்கப்பட்ட தாள்களுடன் அலைகளை குறிக்கும் திட்டமிடப்பட்ட பால்கனியின் அடியில் அலை அலையான கோடுகளை சேர்ப்பதன் மூலம் ஒரு பொதுவான இந்திய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. சிற்றேவலர் போர் நினைவுச்சின்னமானது சித்தோரின் வெற்றி கோபுரத்துடன் ஒற்றுமையைக் கொண்டுள்ளது. கிதோர்பூர் பாலம், சிபூரில் உள்ள வங்காள பொறியியல் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக கட்டிடங்கள், கரக்பூர், இந்திய தொழில்நுட்பக் கழகம் , இஸ்லாமியா கல்லூரி, இங்க்ராம் கெய்ர் இந்தோ-முகலாய பாணியில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம், மற்றும் 1934 பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கொல்கத்தா புனித பால் கதீட்ரலின் கோபுரம் ஆகியவற்றை வடிவமைத்த வில்லியம் இங்க்ராம் என்பவர் இந்த நினைவுச்சின்னத்தையும் வடிவமைத்தார்.

சீரமைப்பு தொகு

 
புதுப்பித்தல் தகடு இலாசுகர் போர் நினைவு

1994 ஆம் ஆண்டில், பி.கே. மொகந்தி என்பவர் தனது காலை நடைப்பயணத்தில் தாவரங்களால் நிரம்பிய பாழடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட சிற்றேவலர் போர் நினைவுச்சின்னத்தைக் கண்டார். நினைவுச்சின்னத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, [2] நினைவுச்சின்னத்தை புதுப்பிக்க மொகந்தி நிதி ஒன்றினை ஏற்பாடு செய்தார். புதுப்பித்தல் பணி 1994 திசம்பரில் நிறைவடைந்தது. அப்போதைய மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஏ.எல். தசுஸ், ஐ.என்.எஸ். நேதாஜி சுபாஸின் 40 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 1994 திசம்பர் 7, அன்று [1] திறந்து வைத்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 Das, Soumitra (12 July 2009). "Tears of Subaltern". The Telegraph (Kolkata). http://www.telegraphindia.com/1090712/jsp/calcutta/story_11220903.jsp. பார்த்த நாள்: 11 March 2013. 
  2. 2.0 2.1 Niyogi, Subhro (4 November 2012). "Forgotten War Memorial gets its place in history". Times of India (Kolkata) இம் மூலத்தில் இருந்து 11 ஏப்ரல் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130411034629/http://articles.timesofindia.indiatimes.com/2012-11-04/kolkata/34907878_1_kolkata-monument-seamen. பார்த்த நாள்: 11 March 2013. 
  3. Basu, Soma (20 November 2011). "Oceans Apart". The Statesman. http://www.thestatesman.net/index.php?option=com_content&view=article&id=390645&catid=44. பார்த்த நாள்: 12 March 2013. 
  4. Butalia, Romesh C (1999), The evolution of the Artillery in India, Allied Publishers, p. 239, ISBN 81-7023-872-2
  5. "Death in Kolkata". John Barry. பார்க்கப்பட்ட நாள் 14 March 2013.