சுதம் கதே (Sudam Kate) என்பவர் இந்தியச் சமூக ஆர்வலர், மருத்துவர் ஆவார். இவர் புனேயில் மகாராட்டிரா ஆரோக்கிய மண்டல் அமைப்புடன் செயல்பட்டு வருகிறார். 1972 முதல் மகாராட்டிரா, குசராத்து மற்றும் மத்தியப் பிரதேசத்தின் கிராமப்புற பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த 3000 அரிவாள்செல் சோகை நோயாளிகளைக் கண்டறிந்து சிகிச்சை அளித்துள்ளார். 2017ஆம் ஆண்டில், அமெரிக்காவைச் சேர்ந்த அரசுசாரா அமைப்பான அரிவாள்செல் சோகை 101 இவருக்கு “2017ஆம் ஆண்டின் அரிவாள்செல் சோகை ஆலோசகர் விருதை” வழங்கியது.[1] இவருக்கு 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் 4வது உயரிய குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள் தொகு

  1. "Dr Kate receives '2017 Sickle Cell Advocate of the Year' award". Indian Express. 12 June 2017. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
  2. "Meet Sickle Cell Advocate & Padma Shri Dr Sudam L Kate". Kalinga TV. 3 February 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
  3. "डॉ. सुदाम काटे यांना 'पद्मश्री'" (in மராத்தி). Loksatta. 26 January 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
  4. "We have to involve more interdisciplinary areas in combining resources to study sickle cell disease: Dr Sudam L Kate". Indian Express. 28 January 2019. பார்க்கப்பட்ட நாள் 11 February 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதம்_கதே&oldid=3789586" இலிருந்து மீள்விக்கப்பட்டது