சுவர்ண பைரவர்

சுவர்ண பைரவர் சிவபெருமானின் வடிவமாக சைவர்களால் வணங்கப்படுகிறார். இவர் சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றும் அழைக்கப்பெறுகிறார். சுவர்ண ஆகர்ஷண பைரவர் என்றால் பொன்னை இழுத்து தருபவர் என்று பொருளாகும்.

சுவர்ண பைரவர்
சமசுகிருதம்Śiva
தமிழ் எழுத்து முறைசுவர்ண பைரவர்
இடம்கயிலை மலை
மந்திரம்ஓம் நமசிவாய
ஆயுதம்பாம்பு
துணைசக்தி, பார்வதி, காளி, துர்க்கை

சுவர்ண பைரவரின் தோற்றம் தொகு

சுவர்ணாகர்ஷண பைரவர் பொன் நிறம் கொண்டவர். மேலும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராகவும், முக்கண்களை உடையவராகவும், நான்கு கரங்களைக் கொண்டவராகவும், மாணிக்க மணிகள் இழைத்த பொன்னாலான அட்சய பாத்திரம் ஏந்தியவராக காணப்படுகிறார்.

இரும்பு, ஓரி, சூலம், சாமரம், ஈட்டி ஆகியவற்றை தரித்துள்ளார். வலக்கையில் அபய முத்திரையை காட்டியபடியும், இடது கையால் பைரவியை அணைத்தபடியும் உள்ளார்.

பைரவரின் இடத்தொடையில் அமர்ந்திருப்பவர் சொர்ண பைரவி என அழைக்கப்படுகிறார்.[1]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.maalaimalar.com/2012/11/30134246/swarna-bhairava-worship.html[தொடர்பிழந்த இணைப்பு] செல்வத்தை அள்ளித்தரும் சொர்ண பைரவர்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவர்ண_பைரவர்&oldid=3799413" இலிருந்து மீள்விக்கப்பட்டது