சூர்யகாந்த் ஆச்சார்யா

சூர்யகாந்த் ஆச்சார்யா (9 திசம்பர் 1929 - 21திசம்பர் 2009) பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் குசராத்தை பிரதிநிதித்துவப்படுத்திய இந்திய நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் ஆவார்.[1]

சூர்யகாந்த் ஆச்சார்யா
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
19 ஆகத்து 2005 – 21 திசம்பர் 2009
பின்னவர்பிரவின் நாயக்
தொகுதிகுசராத்து
துணைத்தலைவர், மாநிலத் திட்டக்குழு, குசராத்து
பதவியில்
சூன் 1998 – சனவரி 2003
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சூர்யகாந்த் ஆச்சார்யா

(1929-12-12)12 திசம்பர் 1929
ஜூனாகத், ஜூனாகத் அரசு, பிரித்தானிய இந்தியா
இறப்பு21 திசம்பர் 2009(2009-12-21) (அகவை 80)
ஜூனாகத், குசராத்து, இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி (1980-2009)
பிற அரசியல்
தொடர்புகள்
பாரதீய ஜனசங்கம் (1957-1977)
ஜனதா கட்சி (1977-1980)
துணைவர்கேமாபென் ஆச்சாரியா
வாழிடம்(s)துப்டி மனை, தாட்டார் சாலை, ஜூனாகத் மாவட்டம், குசராத்து

இவர் குசராத்து மாநிலத்திலிருந்து 2005[2] முதல் 2011 வரையிலான மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, இந்திய மாநிலங்கள் குழுவின் நாடாளுமன்றத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சூன் 1998 முதல் சனவரி 2003 வரை குஜராத்தின் மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருந்தார்.

இவர் 1975-80 காலகட்டத்தில் குசராத்து மாநிலத்தில் சுகாதார அமைச்சராக இருந்த ஹேமாபென் ஆச்சார்யாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.[3]

மேற்கோள்கள் தொகு

  1. "BJP MP Suryakant Acharya passes away". NetIndian. 21 December 2009. பார்க்கப்பட்ட நாள் 26 April 2018.
  2. "Suryakantbhai Acharya Former Member Of Parliament (RAJYA SABHA)". Rajya Sabha Secretariat, New Delhi. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
  3. "Gujarat BJP Rajya Sabha MP Suryakant Acharya passes away". DeshGujarat. பார்க்கப்பட்ட நாள் 30 October 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூர்யகாந்த்_ஆச்சார்யா&oldid=3714471" இலிருந்து மீள்விக்கப்பட்டது