செயங்கொண்ட சோழ கொங்காள்வான்

செயங்கொண்ட சோழ கொங்காள்வான்[1][2][3][4] முதலாம் குலோத்துங்கன் ஆட்சி(கி.பி 1070 முதல் கி.பி 1125 வரை) காலத்தில் கொங்கு 24 நாட்டில் ஒன்றான வடகரை நாடு நாட்டை ஆட்சிபுரிந்தார் [சான்று தேவை]. இவருக்கு ஊராழ்வான் [சான்று தேவை]பொறுப்பும் பெற்று இருந்தார்.

கொடிவேரி அணைக்கட்டு தொகு

கொங்கு நாட்டில் ஒன்றான வடகரை நாட்டில் குளவாற்றூர் தற்போதைய ஈரோடு கோபிச்செட்டிப்பாளையம் தாலுக்காவில் உள்ள கொடிவேரி என்ற இடத்தில் பவானி ஆற்றுநீரைத்தேக்கி (இக்குளம் அட்டி) கொடிவேரி அணைக்கட்டு கால்வாயை செயங்கொண்ட சோழ கொங்காள்வான் வெட்டினார்.[சான்று தேவை] முதலாம் குலோத்துங்கனின் 55 வது ஆட்சி ஆண்டில் (கி.பி 1125) கொடிவேரியில் பவானி ஆற்றுநீர் பாயும் இடத்தை அகலப்படுத்தி நீரை பெரும் கற்களைக் கொண்டு தேக்கி கால்வாய் வெட்டினார்.[சான்று தேவை] இன்று இது கொடிவேரி அணைக்கட்டு என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை] இந்த செய்தி கொடிவேரி , பவானி ஆற்றங்கரையில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது.

கல்வெட்டு சான்று தொகு

இந்த கொடிவேரி அணைக்கட்டு பற்றிய கல்வெட்டு அணைக்கட்டு கரையில் உள்ளது.[சான்று தேவை]

  1. ஸ்வஸ்தி ஸ்ரீ குலோத்
  2. துங்க சோழதேவற்
  3. கு யாண்டு ஐம்பத்து அ
  4. ஞ்சாவது வடகரை நாட்டு
  5. க் குளவாற்றூரிலருக்கும்
  6. ஊராளி செம்ப வேட்டுவ
  7. ன் தொண்டயன் பிள்ளா
  8. நான சயங்கொண்டசோழ
  9. க் கொங்காள்வானேன் இக்குள
  10. ம் அட்டி
  11. காலும் வெட்டி
  12. விச்சேன் இது
  13. ஆக்குவான் பா
  14. தம் எந்தலைமேல்
  15. இது அழிப்பான் வழி
  16. அறுவான்

நீர்ப்பாசன கால்வாய்கள் தொகு

கொடிவேரி அணையின் வடக்கு பக்கம் ஒரு கால்வாயும் தெற்கு பக்கம் ஒரு கால்வாயும் வெட்டினார்.[சான்று தேவை]
கொடிவேரி அணையின் வடக்கு பகுதியில் உள்ள கால்வாய் அத்தாணி வரை செல்கிறது ஏறக்குறைய 10 கி.மீ தொலைவு செல்கிறது. இந்த கால்வாய் அரக்கன்கோட்டை கால்வாய் என்று பொதுமக்களால் அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]
கொடிவேரி அணையின் தெற்கு பகுதியில் உள்ள மற்றோரு கால்வாய் கவுந்தப்பாடி மேட்டுப்பாளையம் வரை ஏறக்குறைய 15 கி.மீ செல்கிறது. இந்த கால்வாய் தட்டப்பள்ளி கால்வாய் என்று அழைக்கப்படுகிறது.[சான்று தேவை]

குறிப்புகள் தொகு

  1. "Kodiveri Dam built by Semba Vettuvan Jayangondasola-Kongalvan". Archaeological Survey of India. https://books.google.co.in/books?id=QQluAAAAMAAJ&q=kongalvan&dq=kongalvan&hl=en&sa=X&ved=0CCAQ6AEwAWoVChMImLiUkuLsxwIVUhqOCh3aUAF2. 
  2. "கொடிவேரி அணையை கட்டி நீர்ப் பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்". தினமணி. http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/06/01/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA/article2843598.ece. பார்த்த நாள்: June 1, 2015. 
  3. "கொடிவேரி அணையை கட்டி நீர்ப்பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும்.". தினகரன் இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 23, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150923214838/http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=460063&cat=504. பார்த்த நாள்: June 1, 2015. 
  4. "கொடிவேரி அனை உருவான விதம்". நம்ம ஈரோடு. http://ourerode.com/?p=221. பார்த்த நாள்: July 03, 2016. [தொடர்பிழந்த இணைப்பு]