செயப்படுபொருள் குன்றிய வினை

மொழி இலக்கணத்தில் செயப்படுபொருள் குன்றிய வினை என்பது செயப்படுபொருளை ஏற்காத வினை ஆகும். இது ஒரு வினைச்சொல் செயற்படுபொருளை ஏற்குமா ஏற்காதா என்ற அடிப்படையில் வினைகளை இரண்டாகப் பிரிப்பதால் ஏற்படும் பகுப்புக்களில் ஒன்று. மற்றது செயப்படுபொருள் குன்றா வினை ஆகும். ஆங்கிலத்தில் இது Intransitive verb எனப்படும்.

எடுத்துக்காட்டுக்கள் தொகு

எதை? யாரை? ஆகிய கேள்விகளுக்கு பதில் தர முடியாத வினைகள் செயப்படுபொருளை ஏற்கா. எனவே அத்தகைய வினைகள் செயப்படுபொருள் குன்றிய வினைகள். எடுத்துக்காட்டாக, போனான் என்ற வினை தொடர்பில் எதைப் போனான்? யாரைப் போனான்? ஆகிய கேள்விகளுக்கு விடை கிடையாது. எனவே போனான் என்பது செயப்படுபொருள் குன்றிய வினை. இதைப் போலவே பின்வரும் வினைகளும் செயப்படுபொருள் குன்றிய வினைகளாகும்:

  • படுத்தான்
  • வந்தான்
  • சிரித்தான்
  • விழுந்தான்
  • அசைந்தான்

மேற்கோள்கள் தொகு