செயிண்ட்-டொமிங்கு (Saint-Dominge) கரீபியன் தீவான லா எசுப்பானியோலாவில் 1659 முதல் 1809 வரை அமைந்திருந்த ஓர் பிரெஞ்சுக் குடியேற்றப் பகுதியாகும். எசுப்போனியோலாவின் மேற்குப் பகுதியையும் டோர்ட்டுகா தீவுகளையும் 1659 முதல் பிரான்சு குடிமைப்படுத்தி யிருந்தது. எசுப்பானியாவுடன் ஏற்பட்ட ரைசுவிக் உடன்பாட்டின்படி தீவின் மேற்குப்பகுதியிலும் 1795ஆம் ஆண்டில் முழுமைக்கும் பிரான்சின் இந்த ஆளுமையை எசுப்பானியா அங்கீகரித்தது. 1795 முதல் 1804 வரை பிரான்சின் முழுமையான கட்டுப்பாட்டில் எசுப்போனியோலா தீவு இருந்தது. 1804இல் மேற்குப் பகுதியிலிருந்து விலகிக்கொள்ள எயித்தியக் குடியரசு அமைந்தது. இத்தீவின் கிழக்குப் பகுதியை 1809ஆம் ஆண்டு பிரான்சு எசுப்பானியாவிற்கு திருப்பியது.