சேவைகளிடை உளவுத்துறை
இடைசேவை அறிவு (Inter-Services Intelligence) பாகிஸ்தானின் மூன்று உளவு அமைப்புகளின் மிகப்பெரியது. 1948இல் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமைப் பணியகம் இஸ்லாமாபாதில் அமைந்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்புக்காக நடவடிக்கை செய்வது இவ்வமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும். இந்த நிலையில் டாலிபான் போன்ற முஸ்லிம் அமைப்புகளுக்கும் காலிஸ்தான் இயக்கம் போன்ற இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளுக்கும் இவ்வமைப்பு உதவி செய்துள்ளது.
2008 காபூல் இந்திய தூதரகம் மீது தாக்குதலில் இடைசேவை அறிவு டாலிபானுக்கு உதவி செய்தது என்று ஆகஸ்ட் 2008இல் அமெரிக்காவின் நடுவண் ஒற்று முகமை தெரிவித்துள்ளது.