சோளகர்

இந்தியப் பழங்குடிகள்

சோளகர் (Sholaga) எனப்படுபவர்கள் தமிழகத்திலும்[1] கர்நாடக மாநிலத்திலும் வசிக்கும் பழங்குடி மக்களாவர்.

சோளகர்
ஒரு சோளகப் பழங்குடி (1909).
மொத்த மக்கள்தொகை
20,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 இந்தியா
மொழி(கள்)
சோளகர் மொழி
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இருளர், தமிழர், யருக்களர்

வாழும் பகுதிகள் தொகு

சோளகர் வாழும் பகுதிகள் மலைக்காடுகளில் உள்ள பகுதிகளில், இலிங்காயத்தார் என்னும் மக்கள் வாழும் பகுதிகளை ஒட்டி அமைகிறது.[2]

சோளகர் வாழ்க்கை நிலை தொகு

காடுகளில் வேட்டையாடுதலை முதன்மையான தொழிலாகக் கொண்டிருந்த இவர்கள் சொந்த நிலமோ, உழவு மாடுகளோ இல்லாததால், கூலி விவசாயிகளாக இலிங்காயத்தாரிடம்[சான்று தேவை] வேலை செய்கின்றனர்.

தெய்வ வழிபாடு தொகு

சோளகர் இந்து சமயதைப் பின்பற்றுகின்றனர். மகேசுவரன், இரங்கசாமி, ஆகியவை அவர்களின் முக்கிய கடவுள்களாகவுள்ளனர்.[3]

மொழி தொகு

இவர்கள் திராவிட மொழிக்குடும்ப மொழிகளில் ஒன்றான சோளகர் மொழியைப் பேசுகின்றனர்.

சோளகர் தொட்டி தொகு

இம்மக்களின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் சோளகர் தொட்டி புதினத்தில் ச. பாலமுருகன் பதிவுசெய்துள்ளார்.

குறிப்புகள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோளகர்&oldid=2582471" இலிருந்து மீள்விக்கப்பட்டது