ச. கு. கார்வேந்தன்

இந்திய அரசியல்வாதி

ச. கு. கார்வேந்தன் (S.K. Kharventhan, பிறப்பு: 10 மே 1948) இந்திய அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் வழக்கறிஞர் ஆவார். 1996 முதல் 1998 வரை தமிழ் மாநில காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினோராவது மக்களவை), 2004 முதல் 2009 வரை இந்தியத் தேசிய காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (பதினான்காவது மக்களவை) இருந்தார்.[1] 14 ஆவது மக்களவையில் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்ற மூவர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[2]

ச. கு. கார்வேந்தன்
நாடாளுமன்ற உறுப்பினர்
தொகுதிபழனி மக்களவைத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 மே 1948 (1948-05-10) (அகவை 75)
தாராபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ச. கு. வெண்மதி
வாழிடம்தாராபுரம்
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

வகித்த பதவிகள் தொகு

  • தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினராக ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார்.
  • அனைத்து இந்திய பார் கவுன்சில் தலைவராக இருந்தார்.
  • இந்திய சட்டக் கல்வி மேம்பாட்டுக்கு தேசிய விருது பெற்றார்.
  • வழக்கறிஞர் தொழிலில் வாணாள் சாதனை விருது பெற்றார்.

நூலாசிரியராக தொகு

சமூக நீதி என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். இந்த நூலை தாராபுரம் எஸ் கே கே அறக்கட்டளை வெளியிட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. "Kharventhan,Shri Salarapatty Kuppusamy". Lok Sabha. Archived from the original on 17 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 May 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. S K Kharventhan - a top performer in 14th Lok Sabha
"https://ta.wikipedia.org/w/index.php?title=ச._கு._கார்வேந்தன்&oldid=3552511" இலிருந்து மீள்விக்கப்பட்டது