டொமினிக் ஜீவா
டொமினிக் ஜீவா (Dominic Jeeva, 27 சூன் 1927 – 28 சனவரி 2021) ஈழத்து எழுத்தாளரும், பதிப்பாளரும் ஆவார்.[1] இவரது தண்ணீரும் கண்ணீரும் சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.[2] 1966 இல் மல்லிகை என்ற மாத இதழை ஆரம்பித்துத் தொடர்ந்து நடத்தி வந்தார்.[3] இவரது எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் ஈழத்தின் குறிப்பிடத்தக்க ஒரு சுயவரலாற்று நூலாகும்.[4]
டொமினிக் ஜீவா | |
---|---|
![]() | |
பிறப்பு | யாழ்ப்பாணம் | 27 சூன் 1927
இறப்பு | சனவரி 28, 2021 கொழும்பு, இலங்கை | (அகவை 93)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | இதழாசிரியர் |
அறியப்படுவது | எழுத்தாளர், மல்லிகை ஆசிரியர் |
பெற்றோர் | ஆவுரம்பிள்ளை யோசப், மாரியம்மா |
வாழ்க்கைத் துணை | இராணி |
பிள்ளைகள் | 2 பெண்கள், 1 ஆண் |
இவரது நூல்கள் தொகு
சிறுகதைத் தொகுப்புகள் தொகு
- தண்ணீரும் கண்ணீரும் (1960)[5]
- பாதுகை (1962)[6]
- சாலையின் திருப்பம் (1967)[7]
- வாழ்வின் தரிசனங்கள் (2010)[8]
- டொமினிக் ஜீவா சிறுகதைகள்[9]
கட்டுரைத் தொகுப்புகள் தொகு
- அனுபவ முத்திரைகள்[10]
- எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்[11]
- அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம்[11]
- நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்[12]
- முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்[13]
மொழிபெயர்ப்பு நூல் தொகு
ஜீவா பற்றிய ஆய்வு நூல்கள் தொகு
- டொமினிக் ஜீவா - கருத்துக் கோவை (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா நினைவுகள் (லெ. முருகபூபதி, 2001)
- பட்டம் மறுதலிப்பும் பல்வேறு சர்ச்சைகளும் (தொகுப்பு: மேமன்கவி)
- மல்லிகை ஜீவா - மனப்பதிவுகள் (திக்குவல்லை கமால், 2004)
விருதுகள் தொகு
- 2013: இயல் விருது (கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து வழங்கியது)
- 2007: சங்கச் சான்றோர் விருது ( இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கம் வழங்கியது.)
மறைவு தொகு
டொமினிக் ஜீவா 2021 சனவரி 28 மாலை தனது 93-வது அகவையில் கொழும்பில் காலமானார்.[15] இறந்த பின்னர் இவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று இருப்பது கண்டறியப்பட்டு, அவரது உடல் 2021 ஜனவரி 30 சனிக்கிழமை சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இறுதிக்கிரியைகள் நடத்தப்படாமல் கொழும்பில் தகனம் செய்யப்பட்டது.[16]
மேற்கோள்கள் தொகு
- ↑ "வலைவாசல்:மல்லிகை". நூலகம். http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "டொமினிக் ஜீவாவின் பிறந்த நாள்". அத தெரண. சூன் 27, 2011. http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2662. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ கோப்பாய் சிவம். "இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைகள் சஞ்சிகைகள்". நூலகம். http://www.noolaham.net/project/02/125/125.htm. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்". விருபா. http://www.viruba.com/final.aspx?id=VB0000501. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "தண்ணீரும் கண்ணீரும்". நூலகம். http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "பாதுகை". நூலகம். http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "சாலையின் திருப்பம்: சிறுகதைகள்". கூகுள் புட்சு. http://books.google.lk/books/about/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA.html?id=j67KXwAACAAJ&redir_esc=y. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "வாழ்வின் தரிசனங்கள்". நூல் உலகம். http://www.noolulagam.com/product/?pid=4128. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "டொமினிக் ஜீவா:". தமிழாதர்சு. http://www.tamilauthors.com/writers/sri%20lanka/Dominic%20Jeeva.html. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "அனுபவ முத்திரைகள்". கன்னிமாரா பொது நூலகம் இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304130447/http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=315918. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ 11.0 11.1 சுயாதீன கலை, திரைப்பட கழகம். "2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு!". இனியொரு... http://inioru.com/?p=13580. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்". நூலகம். http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ "முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்". விருபா. http://www.viruba.com/final.aspx?id=VB0000502. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ கே. எசு. சிவகுமாரன். "எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் (ஆங்கில மொழியில்)". தெயிலி நியூசு இம் மூலத்தில் இருந்து 2007-09-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070930033710/http://www.dailynews.lk/2004/07/14/artscop02.html. பார்த்த நாள்: டிசம்பர் 16, 2012.
- ↑ மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவா காலமானார், வீரகேசரி, சனவரி 28, 2021
- ↑ மறைந்த மூத்த எழுத்தாளர் டொமினிக் ஜீவாவுக்கும் கொரோனா, வீரகேசரி, 30-01-2021