தமிழ் ஹரிஜன் (இதழ்)
தமிழ் ஹரிஜன் 1940 களில் இந்தியாவில் இருந்து கிழமை தோறும் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் பொ. திருகூடசுந்தரம் ஆவார். இது அரிசனங்கள் என ஒதுக்கப்பட்டு வாழ்ந்த மக்களுக்காகக் குரல் கொடுத்த காந்தியடிகளின் கருத்துரைகளை வெளியிட்டது. இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.