தான்ய மாணிக்கியா

திரிபுரா இராச்சியத்தின் அரசன்

தான்ய மாணிக்கியா (Dhanya Manikya) என்பவர் 1490 முதல் 1515 வரை திரிபுரா ராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். இவர் காலத்தில் திரிபுர சுந்தரி கோயில் நிறுவப்பட்டது. [1]

தான்ய மாணிக்கியா
தான்ய மாணிக்கியாவின் காலத்திய வெள்ளி நாணயம் (1514)
திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மன்னன்
ஆட்சிக்காலம்1490-1515
முன்னையவர்முகுத் மாணிக்கியா
பின்னையவர்தவாஜா மாணிக்கியா
Consortகமலா தேவி
குழந்தைகளின்
பெயர்கள்
மரபுமாணிக்கிய வம்சம்
தந்தைமுதலாம் ரத்ன மாணிக்கியா
மதம்இந்து சமயம்

சுயசரிதை தொகு

இவரது தளபதிகளான ரே கச்சாக் மற்றும் ரே கச்சம் ஆகியோரின் உதவியால், திரிபுராவின் பிராந்திய களத்தை கிழக்கு வங்காளத்திற்கு நன்கு விரிவுபடுத்தினார். முழு கொமிலா மாவட்டம் மற்றும் வங்காளதேசத்தின் சில்ஹெட், நவகாளி மற்றும் சிட்டகொங் மாவட்டங்களின் சில பகுதிகளின் தனது கட்டுப்பாட்டை நிறுவினார். [2]

தான்ய மாணிக்கியா பல கோவில்களை அமைத்தார். உதய்ப்பூரில் உள்ள திரிபுரசுந்தரி கோயில் அதில் முதன்மையானது. 1515 ஆம் ஆண்டு பெரியம்மை நோயால் இறப்பதற்கு முன் தன்யா இராணுவ வலிமையின் மூலம் ராச்சியத்தை பலப்படுத்தினார்.

இதனையும் கான்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "History of Tripura". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 31 May 2012.
  2. "Leading lights among the Manikyas". tripurainfo.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2019.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தான்ய_மாணிக்கியா&oldid=3801268" இலிருந்து மீள்விக்கப்பட்டது