திரிபுரம் (இந்து தொன்மவியல்)

திரிபுரம் அல்லது முப்புரம் (Tripura,) என்பது வானத்தில் பறக்கும் வகையிலான கோட்டைகளுடன் கூடிய மூன்று நகரங்கள் ஆகும். இந்த நகரங்கள் இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்திலானவைகள். இதனை நிறுவியவர் அசுரர் குல கட்டிடக் கலைஞராகிய மயன் ஆவார். இந்த திரிபுரங்களை ஆட்சி செய்வதர்கள் தாரகன் எனும் அசுரரின் மகன்களான தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆவார். இந்த அசுர சகோதர்கள் செய்த கொடுமைகளால், சிவபெருமான் இந்த அசுர சகோதரர்களையும், அவர்களின் திரிபுரங்களையும் எரித்ததால் திரிபுராந்தகர் எனப்போற்றப்பட்டார்.

வலது பக்க மேல் மூலையில்:ஐந்து தலைகள் கொண்ட சிவ வடிவான திரிபுராந்தகர் திரிபுரங்களை நோக்கி அம்பு விடும் காட்சி. திரிபுராந்தகர் மேரு மலையை வில்லாகவும், வாசுகியை நாணாகவும், சூரியன், சந்திரன் ஆகியோரை தேர்ச் சக்கரங்களாகக் கொண்டு திரிபுரங்கள் மீது அம்புகளை தொடுக்கும் காட்சி.

மேற்கோள்கள் தொகு