மேரு (மலை)
மேரு (சமஸ்கிருதம்: मेरु) என்பது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையாகும். மகாமேரு, மந்திர மலை என்றும் இம்மலை அழைக்கப்பெறுகிறது.
தேவர்களும், அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடைவதற்கு இம்மலையை மத்தாக பயன்படுத்தினார்கள் என்கிறது கூர்ம புராணம்.
கடைச்சங்க காலத்தில் குமரியாறு பஃறுளியாறு ஆகிய ஆறுகள் மேருமலையில் உற்பத்தியாகியமைக்கான சான்றுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES)தென்படுகின்றன.[1]