திருமணிக்கூடம்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.[1] திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.[1]

திருமணிக்கூடம்
திருமணிக்கூடம் is located in தமிழ் நாடு
திருமணிக்கூடம்
திருமணிக்கூடம்
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்:11°10′39″N 79°46′45″E / 11.17750°N 79.77917°E / 11.17750; 79.77917
பெயர்
வேறு பெயர்(கள்):வரதராஜப் பெருமாள் கோயில்
பெயர்:திருமணிக்கூடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மயிலாடுதுறை
அமைவு:திருநாங்கூருக்கு அருகில்
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிட கட்டிடக்கலை
வரலாறு
அமைத்தவர்:சோழர்கள்[சான்று தேவை]
விவரம் பெயர்
இறைவன் கீழ்த்திசை நோக்கி நின்ற திருக்கோலத்தில் காணப்படும் வரதாஜப் பெருமாள்; கஜேந்திரவரதன்; மணிக்கூட நாயகன்
இறைவி திருமாமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி) மற்றும் பூதேவி
தீர்த்தம் சந்திர புஷ்கரணி
விமானம் கனகவிமானம்

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமணிக்கூடம்&oldid=3054877" இலிருந்து மீள்விக்கப்பட்டது