திருலோகி சுந்தரேசுவரர் கோயில்

திருலோகி சுந்தரேசுவரர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.

அமைவிடம் தொகு

இக்கோயில் கும்பகோணம் வட்டத்தில் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. முன்னர் ஏமநல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது.[1] இவ்வூரில் இக்கோயிலும், கயிலாயநாதர் கோயில் என்ற ஒரு கோயிலும் உள்ளன. இவற்றுள் இக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது. [2]

இறைவன் தொகு

லிங்கத்திருமேனியில் இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி. இறைவனும், இறைவியும் திருவாசியுடன் நந்திமீது அமர்ந்துள்ள சிற்பத்தை இக்கோயிலில் காணலாம்.[1]

சிறப்பு தொகு

முதலாம் ராஜராஜசோழனின் மனைவியான திரைலோக்கிய மாதேவியின் பெயரால் இந்த ஊர் மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  2. திரைலோக்கிய சுந்தரம்