செய்யாறு

விக்கிமீடியப் பகுப்பு
(திருவத்திபுரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

செய்யாறு (Cheyyar), அல்லது திருவத்திபுரம் (Thiruvathipuram) அல்லது திருவோத்தூர் (Tiruvothur) இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு வட்டம், செய்யாறு ஊராட்சி ஒன்றியம், செய்யாறு வருவாய் கோட்டம், செய்யாறு (சட்டமன்றத் தொகுதி) ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் 27 நகராட்சி உறுப்பினர்களுடன் கூடிய இரண்டாம் நிலை நகராட்சியாகவும் அமைந்துள்ளது. இது ஆரணி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். செய்யாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருவத்திபுரம் நகரம் இங்கு அமைந்துள்ள வேதபுரீஸ்வரர் ஆலயம் மற்றும் செய்யாறு ஆற்றின் மூலம் நன்கு அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் திருவத்திபுரம் நகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

திருவத்திபுரம்
செய்யாறு
இரண்டாம் நிலை நகராட்சி
அடைபெயர்(கள்): திருவத்திபுரம், திருவோத்தூர்,
திருவத்திபுரம் is located in தமிழ் நாடு
திருவத்திபுரம்
திருவத்திபுரம்
செய்யாறு, தமிழ்நாடு
திருவத்திபுரம் is located in இந்தியா
திருவத்திபுரம்
திருவத்திபுரம்
திருவத்திபுரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°39′43″N 79°32′37″E / 12.662000°N 79.543500°E / 12.662000; 79.543500
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
மாகாணம்தொண்டை நாடு
வருவாய் கோட்டம்செய்யார்
சட்டமன்றத் தொகுதிசெய்யார்
மக்களவைத் தொகுதிஆரணி
தோற்றுவித்தவர்தமிழ்நாடு அரசு
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்திருவத்திபுரம் நகராட்சி
 • வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் (RTO)ஆரணி
 • மின்பகிர்மான வட்டம்ஆரணி
 • மக்களவை உறுப்பினர்திரு.எம்.கே.விஷ்ணுபிரசாத்
 • சட்டமன்ற உறுப்பினர்திரு. ஓ.ஜோதி
 • மாவட்ட ஆட்சியர்திரு. முருகேஷ், இ.ஆ.ப.
பரப்பளவு[1]
 • இரண்டாம் நிலை நகராட்சி72 km2 (28 sq mi)
பரப்பளவு தரவரிசைமீட்டர்கள்
ஏற்றம்123 m (404 ft)
மக்கள்தொகை (2011)
 • பெருநகர்37,986
இனங்கள்திருவண்ணாமலையன்
மொழிகள்
 • அலுவல் மொழிதமிழ்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு604 407
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4182
வாகனப் பதிவுTN 97
சென்னையிலிருந்து தொலைவு110 கி.மீ (68மேல்)
திருவண்ணாமலையிலிருந்து தொலைவு93 கி.மீ (58மைல்)
ஆரணியிலிருந்து தொலைவு33 கிமீ (21மைல்)
இராணிப்பேட்டையிலிருந்து தொலைவு45 கி.மீ (25மைல்)
செங்கல்பட்டிலிருந்து தொலைவு61 கிமீ
காஞ்சிபுரத்திலிருந்து தொலைவு30 கிமீ (19மைல்)
வேலூரிலிருந்து தொலைவு65 கிமீ
இணையதளம்திருவத்திபுரம் நகராட்சி

திருவத்திபுரம் நகரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் வடகிழக்கு மூலையில் கடைக்கோடி பகுதியாக அமைந்துள்ளது. செய்யாறு நதிக்கரையில் மற்றும் ஆற்காடு-திண்டிவனம் மாநில நெடுஞ்சாலை 5 மற்றும் ஆரணி-காஞ்சிபுரம் ஆகிய நகரங்களை இணைக்கும் இடத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இந்நகரம் பட்டு மற்றும் அரிசி நகரான ஆரணிக்கும் மற்றும் காஞ்சிபுரம் நகருக்கு மிக அருகாமையில் உள்ளது.

திருவத்திபுரம் நகரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலம் (செய்யாறு சிப்காட்) Maangaal sipcot ஒன்று இயங்கி வருகிறது.

திருவத்திபுரம் நகரம் உருவாக்கம்தொகு

  • இந்திய விடுதலையின் போது மாநிலம் மற்றும் மாவட்டம் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. கிராமமாக இருந்த திருவத்திபுரம் வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் போது 1959 ஆம் ஆண்டு புதிய செய்யார் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டது.
  • 1965 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை பேரூராட்சியாக செயல்பட்டது.
  • 1989க்கு முன் வட ஆற்காடு மாவட்டமாக இருந்த காலக் கட்டத்தில் திருவத்திபுரம் பேரூராட்சியாக விளங்கியது.

வரலாறுதொகு

பல்லவர்கள், சோழர்கள் ஆட்சிப்பகுதியின் முக்கிய இடமாக இந்த திருவோத்தூர் பகுதி இருந்து வருகிறது[6] இத்திருத்தலம் திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட சிவத்தலமாகும்.

அமைவிடம்தொகு

பெயர்க் காரணம்தொகு

திருவத்திபுரம் என்ற பெயர் இங்குள்ள இறைவன் உயர்த்த மந்திரமான வேதத்தை ரிஷிகளுக்கு உரைத்ததால் வந்தது. 'திரு' என்ற சொல் இறைவனையும் 'ஓதுதல்' என்ற சொல் உரைத்தல் என்பதையும் குறிக்கிறது. இதன் பழைய பெயர் திருவோத்தூர் என்பதாகும். இதுதான் இன்று மருவி திருவத்திபுரம் என்று அழைக்கப்படுகிறது.[7]. அதேபோல், செய்யார் என்ற பெயர் செய்யாறு என்ற நதி இங்கு ஓடுவதால்தான் தோன்றியது என கூறப்படுகிறது. 'சேய்' என்ற வார்த்தை பிள்ளை என்பதயும், 'ஆறு' என்ற வார்த்தை நதி என்பதயும் குறிக்கிறது. வரலாற்றில் பார்வதி (சிவன் மனைவி) அவரது மகன் முருகன் விளையாட தனது திரிசூலம் மூலம் உருவாக்கிய ஆறுதான் �'சேயாறு' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊரின் பழைய பெயர் சேயாறு. இதுதான் இன்று மருவி செய்யாறு என்றழைக்கப்படுகிறது. ஆனால், நகரம், செய்யாறு என இன்றுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் வெறும் வாய்ச்சொல்லாகத் தான் கூறப்பட்டு வருகிறது. ஆதலால் ஆற்றின் பெயராகத் தான் செய்யாறு குறிக்கப்படுகிறது. ஆனால் நகரத்தின் பெயராக திருவத்திபுரம் என்று தான் அழைக்கப்படுகிறது.

மக்கள் வகைப்பாடுதொகு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37,802 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். திருவத்திபுரம் மக்களிள் கல்வியறிவு பெற்றோர் 76.59% ஆகும்.[8]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
195114,451—    
196115,386+6.5%
198119,274+25.3%
199125,067+30.1%
200135,201+40.4%
201137,802+7.4%
Sources:

நிர்வாகம் மற்றும் அரசியல்தொகு

நகராட்சிதொகு

நகராட்சி அதிகாரிகள்
தலைவர்
ஆணையர்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
சட்டமன்றத் தொகுதி செய்யார் (சட்டமன்றத் தொகுதி)
சட்டமன்ற உறுப்பினர் திரு.ஓ.ஜோதி
மக்களவைத் தொகுதி ஆரணி மக்களவைத் தொகுதி
மக்களவை உறுப்பினர் திரு.எம்.கே. விஷ்ணு பிரசாத்

சட்டமன்றத் தொகுதிதொகு

வருவாய் வட்டம்தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 வட்டங்களில் செய்யார் வட்டமும் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருவத்திபுரம் உள்ளது. இந்த வட்டத்தில் 131 வருவாய் கிராமங்களும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இந்த வட்டத்தில் மக்கள் தொகை 2,18,188 ஆகும். இந்த வட்டத்தில் செய்யார் ஊராட்சி ஒன்றியம் மற்றும் அனக்காவூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய ஒன்றியங்கள் இந்த வட்டத்தில் அமைந்துள்ளது [12]. அதுமட்டுமில்லாமல் இந்த வட்டத்தில் திருவத்திபுரம் நகராட்சி அமைந்துள்ளது.

வருவாய் கோட்டம்தொகு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இதுவும் ஒன்றாகும். செய்யார் வருவாய் கோட்டம் 01.04.1959 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த வருவாய் கோட்டத்தின் கீழ் செய்யார், வெம்பாக்கம், வந்தவாசி, சேத்துப்பட்டு ஆகிய தாலுகாக்கள் அடங்கியுள்ளது. செய்யாறு வருவாய் கோட்டத்தில் 459 வருவாய் கிராமங்கள் உள்ளன. இந்த வருவாய் கோட்டத்தின் தலைமையகம் திருவத்திபுரம் நகரில் அமைந்துள்ளது.

போக்குவரத்துதொகு

சாலை வசதிகள்தொகு

திருவத்திபுரம் நகரானது ஆரணி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பட்டு நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5A உம் மற்றும் புதுச்சேரி, திண்டிவனம், மேல்மருவத்தூர், வந்தவாசி மற்றும் ஆற்காடு, இராணிப்பேட்டை நகரை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 5 உம் இந்த நகரத்தை இணைக்கும் வகையில் வலைப்பின்னலாக அமைக்கப்பட்டுள்ளது.

  • மாவட்ட சாலை: திருவத்திபுரம் - முக்கூர் - நாவல்பாக்கம் - பெரிய கொழப்பலூர் - SH4 கூட்டு சாலை

ஆகிய சாலைகள் திருவத்திபுரம் நகரத்தை இணைக்கின்றன.

பேருந்து வசதிகள்தொகு

திருவத்திபுரம் நகரத்தில் போக்குவரத்து நிர்வாக வசதிக்காக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த உள்ளூர் பேருந்து சேவைகளை தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. அதுமட்டுமின்றி, 30 கி.மீ. தொலைவுள்ள புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் நகரப்பேருந்து சேவைகளும் மற்றும் ஆரணி, காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்ட தலைநகரம் திருவண்ணாமலை செல்லவேண்டும் என்றால் ஆரணி, போளூர் வழியாகத் தான் செல்லமுடியும். அதற்கு உண்டான பேருந்து வசதிகளும் அடிக்கடி உள்ளன.

பெரிய நகரங்களான சென்னைக்கு 30பேருந்துகளும், சேலத்திற்கு 8 பேருந்துகளும், பெங்களூருக்கு 3பேருந்துகளும், திருச்சிக்கு 1பேருந்து வீதமும் மற்றும் 30கிமீ தொலைவுள்ள கிராமப்புறங்களை இணைக்கும் வகையில் 12பேருந்துகளும் திருவத்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

ஆரணி, திருவண்ணாமலை, படவேடு, போளூர், சேலம், ஒகேனக்கல், திருச்சி, சிதம்பரம், செங்கம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப் படுகின்றன

காஞ்சிபுரம், சென்னை, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி, தாம்பரம், அடையாறு, பூந்தமல்லி ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வந்தவாசி, மேல்மருவத்தூர், திண்டிவனம், புதுச்சேரி, விழுப்புரம், திருச்சி, ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன

பெரணமல்லூர், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆற்காடு, வேலூர், திருப்பதி, பெங்களூரு, ஓசூர், ஆம்பூர், குடியாத்தம், ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தடம் எண் புறப்படும் இடம் சேரும் இடம் வழி
130 செய்யார் சென்னை காஞ்சிபுரம்
110 ஆரணி சென்னை செய்யார், காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
202 (ஒரு பேருந்து மட்டும்) ஆரணி சென்னை செய்யார், காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
423 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
239 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், காஞ்சிபுரம்
339 திருவண்ணாமலை சென்னை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார், காஞ்சிபுரம்
247 போளூர் சென்னை தேவிகாபுரம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், செய்யார், காஞ்சிபுரம், பூந்தமல்லி
249 போளூர் சென்னை தேவிகாபுரம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், செய்யார், காஞ்சிபுரம், பூந்தமல்லி
235 திருவண்ணாமலை காஞ்சிபுரம் கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார்
438 காஞ்சிபுரம் சேலம் செய்யார், ஆரணி, போளூர், திருவண்ணாமலை, அரூர்
473 செய்யார் பெங்களூரு ஆரணி, போளூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி
475 செய்யார் பெங்களூரு சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஓசூர்
444 வந்தவாசி பெங்களூர் செய்யார், ஆற்காடு, வேலூர், ஆம்பூர், கிருஷ்ணகிரி, ஓசூர்
666 காஞ்சிபுரம் திருச்சி செய்யார், ஆரணி, போளூர், திருவண்ணாமலை, பெரம்பலூர்
செய்யார் திருச்சி வந்தவாசி, திண்டிவனம், விழுப்புரம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, பெரம்பலூர்
242 செங்கம் சென்னை போளூர், ஆரணி, செய்யார், காஞ்சிபுரம், பூவிருந்தவல்லி
205 வேலூர் புதுச்சேரி ஆற்காடு, செய்யார், வந்தவாசி, திண்டிவனம்,
189 திருப்பதி புதுச்சேரி சித்தூர், வேலூர், ஆற்காடு, செய்யார், வந்தவாசி, திண்டிவனம்
212 திருப்பதி செய்யார் அரக்கோணம், காஞ்சிபுரம், திருத்தணி
279 ஆரணி தாம்பரம் செய்யார், காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பை, பெருங்களத்தூர்
279B ஆரணி அடையாறு செய்யார், காஞ்சிபுரம், வாலாஜாபாத், படப்பை, பெருங்களத்தூர், தாம்பரம், மேடவாக்கம், வேளச்சேரி
183 வேலூர் மயிலாடுதுறை ஆற்காடு, செய்யார், வந்தவாசி, திண்டிவனம், புதுச்சேரி, சிதம்பரம்
200 வேலூர் மேல்மருவத்தூர் ஆற்காடு, செய்யார், வந்தவாசி
201 வேலூர் திண்டிவனம் ஆற்காடு, செய்யார், வந்தவாசி

தொடருந்து போக்குவரத்துதொகு

திருவத்திபுரம் நகரில் தொடருந்து போக்குவரத்து வசதிகள் தற்போது ஏதுமில்லை. இருந்தாலும் 2008ஆம் ஆண்டு நடைபெற்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் திண்டிவனம் - நகரி இரயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த இரயில் பாதை விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து, ஆந்திர மாநிலம், நகரி வரை அதாவது வந்தவாசி - செய்யாறு - ஆரணி - ஆற்காடு - இராணிப்பேட்டை - அரக்கோணம் மற்றும் திருத்தணி வழியாக இரயில் போக்குவரத்து இணைக்கும் வகையில் திட்டம் தீட்டப்பட்டு அதற்கான இரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. [13].

செய்யாரிலிருந்து 33 கி.மீ. தொலைவுள்ள காஞ்சிபுரம் தொடருந்து நிலையத்திலிருந்து சென்னை, திருப்பதி, மும்பை, புதுச்சேரி, விழுப்புரம் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் தொடருந்து வசதி உள்ளது. அதேபோல் செய்யாரிலிருந்து 67 கி.மீ. தொலைவில் உள்ள வேலூர் காட்பாடி இரயில் நிலையத்திலிருந்து வடமாநிலங்களுக்கும் மற்றும் செய்யாரிலிருந்து 58 கி.மீ. தொலைவிலுள்ள திண்டிவனம் தொடருந்து நிலையத்திலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்ல தொடருந்து வசதிகள் உள்ளன.

விமான போக்குவரத்துதொகு

திருவத்திபுரம் நகரில் விமான போக்குவரத்து தற்போது ஏதுமில்லை. இருந்தாலும் 93 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையம் மூலம் செய்யலாம். அதுமட்டுமின்றி, சென்னையின் 2வது சர்வதேச விமான நிலையம் ஆரணி - காஞ்சிபுரம் சாலையில் வெம்பாக்கம் வட்டம், மாத்தூர் எனுமிடத்தில் அரசுக்கு சொந்தமான 1500 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க 3500 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாக மத்திய அரசு கூறப்படுவதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. [14]

தொழில்வளம்தொகு

2008 ஆம் ஆண்டிற்கு முன்னர் வரை தொன்றுதொட்டு செய்யார் மக்களுக்கு வேளாண்மை சார்ந்த தொழிலும் நெசவுத் தொழிலும் மட்டுமே முக்கிய தொழில்களாக இருந்தன. செழிப்பான கிராமங்களால் சூழப்பட்டதால், செய்யார் முக்கிய வேளாண் நகரமாக விளங்குகிறது. நகருக்கு வெளியே ஆற்காடு - வந்தவாசி - திண்டிவனம் சாலையில் 5 கி.மீ. தொலைவில் தமிழ்நாட்டின் முக்கிய சர்க்கரை ஆலைகளுள் ஒன்றான செய்யார் கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது இங்கு "15மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையமும் செயல்படுகின்றது", ஆவின் பால் பதனிடு நிலையமும் அமைந்துள்ளது. சுற்றுப்புற கிராமங்களிருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் பால் குளிரூட்டப்பட்டு சென்னைக்கு செல்கிறது. இவை தவிர தனியாருக்கு சொந்தமான பெரிய பால்கோவா செய்யார் பால்கோவா தயாரிப்பகமும் உள்ளது. இங்கு நாள்தோறும் தயாராகும் பால்கோவா சென்னை, ஓசூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களுக்கு தினமும் அனுப்பப்படுகிறது. அரசின் நேரடி நெல்கொள்முதல் நிலையமும் உழவர்சந்தையும் சுற்றுப்புற கிராமங்களிருந்து வரும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கின்றன. நெசவு இங்கு பாரம்பரியத் தொழிலாக உள்ளது. கைத்தறி மற்றும் விசைத்தறிகளின் மூலம் பட்டு மற்றும் பருத்தி ஆடைகள் நெய்யப்படுகின்றன.

செய்யாரிலிருந்து ஐந்து கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஜடேரி என்னும் கிராமத்தில் இருந்து வைணவர் நெற்றிகளில் இடும் திருமண் என்னும் நாம கட்டி இந்த கிராம மண்ணில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

செய்யார் சிப்காட்தொகு

2008 ஆம் ஆண்டிற்குப் பின்னர் செய்யார் சட்டமன்றத் தொகுதி பெரிய தொழில் வளர்ச்சி கண்டுள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற கழகத்தின் சார்பில் செய்யாருக்கு அருகில், ஆரணி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள வெம்பாக்கம் வட்டம் மாங்கால் கூட்டு சாலை அருகே செய்யார் தொழிற்பேட்டை (Cheyyaru SIPCOT) மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலமும் (SEZ) அமைக்கப்பெற்று வருகின்றன. இந்த சிப்காட் நிறுவனம் காஞ்சிபுரம் நகரிலிருந்து 10 கி.மீ. தொலைவிலும், திருவத்திபுரம் நகரிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், ஆரணியில் இருந்து 49 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இது சென்னைக்கு அருகில் உள்ளதாலும் திருப்பெரும்புதூர் மற்றும் ஒரகடம் தொழிற்பேட்டைகளின் இடப்பற்றாக் குறையை நீக்க மாற்று இடம் தேவைப்படுவதாலும் இந்தப் பகுதி தேர்ந்தெடுக்கப்படுள்ளது. ஆரம்பிக்கப்பெற்று இரு ஆண்டுகளில் தைவான் நாட்டின் Nike & Lotus காலணி தயாரிப்பகம், அசோக் லே-லாண்டின் அலுமினிய வார்ப்பகம், Llyods ஆகிய நிறுவனங்கள் உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. செய்யார் சிப்காட்டில் மஹேந்திரா மற்றும் ஸ்விங்ஷட்டர் ஆகிய பெரு நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர். மற்றும் இருமந்தாங்கள் அருகே Voltas switch நிறுவனம் தங்களின் உற்பத்தியைத் தொடங்கிவிட்டனர். நிறுவனத்தின் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது.

24-03-2020 நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் 660 ஏக்கர் பரப்பளவில் 770 கோடி செலவில் மருந்தியல் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

கல்விதொகு

செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு தனி கல்வி மாவட்டமாகும். இந்த பள்ளிக் கட்டிடம் ஆகஸ்ட் 31, 1917 இல் திறக்கப்பட்டது. அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி 69 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது. இந்த கல்லூரி முதலில் சென்னை பல்கலைக்கழகத்தில் இணைந்தது. 2002 ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்ட பின்னர், திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் இணைந்தது. இக்கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகரிப்பு சபையினால் மூன்று நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளளது. இது பி.ஏ., எம்.ஏ., பி.எஸ்ஸி., எம்.எஸ்ஸி. மற்றும் பிஎச்.டி. படிப்புகளை வழங்குகிறது. சமீபத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் இங்கு தொடங்கப்பட்டுள்ளது [15].

அருள்மிகு வேதபுரீஸ்வரர் ஆலயம்தொகு

 
ஆற்றங்கரை பாலத்தின் மேலிருந்து பார்க்கும்போது வேதபுரீஸ்வரர் ஆலயம்

அருள்மிகு பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் ஆலயம் தொண்டை மண்டலத்தின் 32 பாடல்பெற்ற தலங்களுள் எட்டாவது தலமாகும். இங்கு சிவன் வேதங்களை புரிபவனாக மேற்கு நோக்கி அமைந்துள்ளார். சிவனடியார் ஒருவர் நதிக்கரையில் பனை மரங்களை நட்டு சிவனை வணங்கி வந்தார். அப்பனை மரங்கள் அனைத்தும் கனி தராத ஆண் பனைகளாகின. இதனைக் கண்டு, சமணர், அச்சிவனடியாரை ஏளனம் செய்தனர். இதனைச் செவியுற்ற திருஞானசம்பந்தர் சமணர்களோடு சொற்போரில் ஈடுபட்டார். இருவரும் தத்தம் இறைவனை வேண்டி தமிழ் செய்யுள் ஏற்றி செய்யாற்றில் விட்டனர். திருஞானசம்பந்தரின் செய்யுள் எதிர் நீந்தி செய்யாறைவென்றான் என்னும் ஊரில் கரை ஒதுங்கியது. சமணர்களின் செய்யுள் ஆற்றின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு அனகப்பதூர் எனுமிடத்தில் ஒதுங்கியது. திருஞானசம்பந்தர் சிவனை வேண்டி பத்து பதிகங்களைப் பாடி ஆண் பனைகளை குழையீன்ற வைத்தார். இன்றும் இத்தல விருட்சமான பனை மரங்கள் கார்த்திகை மாதத்தில் ஆண் பனைகளாக பனை பூக்களையும், சித்திரை மாதத்தில் பெண் பனைகளாக பனை கனிகளையும் ஒரே மரத்தில் விளைவிக்கின்றன. இது வேறு எங்கும் இல்லாத தாவரவியல் விந்தை ஆகும். சிவனை நோக்காது வாயிலை நோக்கி அமர்ந்துள்ள நந்தி இக்கோவிலின் இன்னொரு சிறப்பாகும். வேதங்களை புரியும் இறைவனுக்கு இடையூறுகள் வராமலிருக்க நந்தி சிவனை நோக்காமல் வாயிலை நோக்கி காவல்காப்பதாக நம்பப்படுகிறது. ஒரு சமயம் சிவபக்தரான தொண்டை மன்னனை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக வாயிலை நோக்கி நந்தி திரும்பியது எனும் செவி வழி கதையும் வழக்கில் உண்டு. உட்பிராகாரத்தில், உயரமான பீடத்தில் நாகலிங்கம் சந்நிதி அமைந்துள்ளது. ஞானசம்பந்தர், திருவோத்தூர் தலம் வந்தபோது, அவரை வெறுக்கும் சமணர்கள் ஒரு வேள்வி செய்து, ஐந்து தலைகளை உடைய ஒரு பாம்பை ஞானசம்பந்தர் மீது ஏவினார்கள். அப்போது, இத்தல இறைவன் ஒரு பாம்பாட்டியாக வந்து, ஐந்து தலை நாகத்தின் தலை மீது ஏறி அதை அடக்கி ஆலயத்தினுள் வந்து அமர்ந்தார். அதுவே இந்த நாகலிங்கம் சந்நிதி. இந்த நாகலிங்கத்தை வழிபட்டுவர, நாக தோஷங்கள் விலகும். நாகலிங்கத்தின் நேர் பார்வையில் சனி பகவான் சந்நிதி அமைந்துள்ளது. ஆகையால், சனியால் ஏற்படும் தொல்லைகள், தோஷங்கள், நாகலிங்கத்தை வழிபடுவதால் தீரும். திருமணம் ஆகாதவர்கள், சனிக்கிழமைகளில் இந்தச் சந்நிதியில் 9.30 - 10.30 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெரும் அந்தசமையத்தில் தீபமேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று ஐதீகம்.

ஒரே இடத்தில ஐம்பூத(பஞ்ச)தலங்கள், ஆறடி உயரத்தில் தென்முகக் கடவுள் ஆகியவையும் இத்தலத்தின் சிறப்புகளாகும். தொண்டை மன்னர்கள், பல்லவர்கள், விஜய நகர மன்னர்கள் மற்றும் சோழர்கள் இத்தலத்திற்கு திருப்பணிகள் செய்தனர். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள கன்னட, தெலுங்கு மொழி கல்வெட்டுகள் விஜயநகர மன்னர்களின் பங்களிப்பையும், 11 ஆம் மற்றும் 13 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த சோழர்களின் குறிப்புகளும் இக்கோவிலின் வரலாற்றை பறைசாற்றுகின்றன. சித்திரை மாதத்தில் நடைபெறும் ஆற்றுத்திருவிழா, தெப்பல்-தோப்பு திருவிழா மற்றும் பத்து நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம் ஆகியவை சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோலாகலங்களாகும். தினமும் முக்கால பூஜைகள், பிரதோச சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்தொகு

  1. "District Census Handbook : Tiruvannamalai" (PDF). Census of India. p. 30. 21 June 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அரசானை வெளியீடு
  3. திருவண்ணாமலை மாவட்டத்தில் கல்வி மாவட்டங்களை 5 ஆக பிரிப்பு
  4. செய்யார் நெடுஞ்சாலை கோட்டம்
  5. செய்யார் சுகாதார மாவட்டம்
  6. திருவண்ணாமலை மாவட்டம் இணையதளம்
  7. செய்யார் பெயர்க்கான வரலாறு
  8. திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  9. "Population Details". thiruvathipuram municipality. 2011. 2012-12-29 அன்று பார்க்கப்பட்டது.
  10. 10.0 10.1 "Census Info 2011 Final population totals – Arani". Archived from the original on 2008-04-09. 2021-05-03 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link)
  11. திருவத்திபுரம் நகராட்சியின் மக்கள்தொகை
  12. செய்யார் வருவாய் கோட்டத்தின் வருவாய் வட்டங்கள் மற்றும் வருவாய் கிராமங்கள்
  13. திண்டிவனம் - நகரி ரயில்பாதை திட்டம் மந்தகதியில் நடைபெறும் திட்டப் பணி
  14. [1]
  15. செய்யார் வட்டத்தில் கல்வி

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செய்யாறு&oldid=3703392" இருந்து மீள்விக்கப்பட்டது