திவ்யமணி கருநாடக இசையின் 48வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 48வது இராகத்திற்கு பெயர் ஜீவந்திகா.

இலக்கணம் தொகு

 
திவ்யமணி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி122 ப த3 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி33 ப ம22 ரி1
  • வசு என்றழைக்கப்படும் 8வது வட்டத்தில் (சக்கரத்தில்) 6 வது மேளம்.
  • இந்த இராகத்தில் வரும் சுரங்கள்: ஸட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1), சாதாரண காந்தாரம்(க2), பிரதி மத்திமம்(ம2), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகியவை.
  • இதன் மத்திமத்தை சுத்த மத்திமாக மாற்றினால் இராகம் ரூபவதி (12) ஆகும்.
  • கிரக பேதத்தின் வழியாக எந்த மேளகர்த்தா இராகமும் தோற்றுவிக்காது (மூர்ச்சனாகாரக மேளம் அல்ல).

உருப்படிகள் தொகு

வகை உருப்படி இயற்றியவர் தாளம்
கிருதி லீலகானு ஜூசே தியாகராஜர் ஆதி
கிருதி அப்பா முருகா கோடீஸ்வர ஐயர் ஆதி
"https://ta.wikipedia.org/w/index.php?title=திவ்யமணி&oldid=1351995" இலிருந்து மீள்விக்கப்பட்டது