தெமட்டகொடை மேம்பாலம்

தெமட்டகொடை மேம்பாலம் கொழும்பு, பொரளைப் பகுதியில் ஏற்படும் வாகன நெரிசலைக் குறைக்க அமைக்கப்பட்டது[1]. மொத்தம் ஆறு வழிகளைக் கொண்டுள்ள இந்த மேம்பாலமே இலங்கையின் மிகப் பெரிய மேம்பாலமாகக் கருதப்படுகின்றது. பேசு லைன் வீதி விரிவாக்கத் திட்டத்தின் கீழ் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டது. தெமட்டகொடை புகையிரதக் கடவையின் மேலாக இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.

உசாத்துணைகள் தொகு

  1. "Expansion of road network under way". Archived from the original on 2010-08-23. பார்க்கப்பட்ட நாள் 2010-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமட்டகொடை_மேம்பாலம்&oldid=3558985" இலிருந்து மீள்விக்கப்பட்டது