தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (இந்தியா)

(தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (National Dairy Developement Board-NDDB) இந்திய நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிறுவனம் ஆகும். இதன் தலைமை அலுவலகம் ஆனந்த், குஜராத்தின் ஆனந்த் நகரத்தில் உள்ளது. இத் தலைமை அலுவலகத்தின் தலைவர் பொறுப்பு வகிப்பவர் டாக்டர் அம்ரிதா படேல் ஆவார். இந்தியாவில் வெண்மைப் புரட்சி முலம் பால் மற்றும் பால் சார்ந்த துணைப் பொருட்கள் உற்பத்தியை அதிகப்படுத்தே இதன் நோக்கமாகும்.

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம்
வகைபால் & பால் பொருட்கள் உற்பத்திக்கான மேம்பாட்டு நிறுவனம்
நிறுவுகை1965
தலைமையகம்ஆனந்த், இந்தியா
முதன்மை நபர்கள்தலைவர், டி. நந்தகுமார்
தொழில்துறைபால் பண்ணை
இணையத்தளம்www.nddb.org
அமுல் கூட்டுறவு பால் பண்னையை நிறுவிய மும்மூர்த்திகள்:வர்கீஸ் குரியன், திரிபுவன்தாஸ் படேல் மற்றும் அரிசந்த் மேகா தலாயா

வரலாறு தொகு

தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் டாக்டர் வர்கீஸ் குரியன் தலமையில் 1965-ஆம் ஆண்டில் குஜராத் மாநிலத்தின் ஆனந்த் நகரத்தில் நிறுவப்பட்டது. லால் பகதூர் சாஸ்திரியின் கனவான கைரா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (அமுல்) மூலம் இந்தியா முழுவதும் பால் வழங்கும் திட்டம் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் மூலம் நிறைவானது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு