தேன் நிலவு (திரைப்படம்)

ஸ்ரீதர் இயக்கத்தில் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

தேன் நிலவு 1961-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

தேன் நிலவு
இயக்கம்ஸ்ரீதர்
தயாரிப்புஸ்ரீதர்
சித்ராலயா
கதைஸ்ரீதர்
இசைஏ. எம். ராஜா
நடிப்புஜெமினி கணேசன்
வைஜெயந்திமாலா
வெளியீடுசெப்டம்பர் 30, 1961
ஓட்டம்.
நீளம்15125 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நகைச்சுவை மிளிர்ந்த இத்திரைப்படத்தில் ஏ.எம். ராஜாவின் இசையில் கவியரசு கண்ணதாசன் வரியில் அமைந்த பாடல்கள் அனைத்தும் பெரும் புகழ் பெற்றன. "ஓஹோ எந்தன் பேபி", "பாட்டுப் பாடவா", "காலையும் நீயே" போன்றவை புகழ் பெற்றவை. தமிழ்த் திரைப்படங்களில் அன்றைய நாளில் பெரும் புதுமையாக, இது பெரும்பாலும் காசுமீர் மாநிலத்தில் வெளிப்புறப்படப்பிடிப்பாக எடுக்கப்பட்டது.

பாடல்கள் தொகு

கண்ணதாசன் இயற்றிய பாடல்களுக்கு ஏ. எம். ராஜா இசையமைத்திருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "சின்ன சின்ன கண்ணிலே"  ஏ. எம். ராஜா, பி. சுசீலா 3:44
2. "காலையும் நீயே"  ஏ. எம். ராஜா, எஸ். ஜானகி 3:28
3. "மலரே மலரே தெரியாதோ"  பி. சுசீலா 3:43
4. "நிலவும் மலரும் பாடுது"  ஏ. எம். ராஜா, பி. சுசீலா 3:42
5. "ஓகோ எந்தன் பேபி"  ஏ. எம். ராஜா, எஸ். ஜானகி 3:13
6. "ஊரெங்கும் தேடினேன்"  ஜிக்கி 3:02
7. "பாட்டு பாட வா"  ஏ. எம். ராஜா 3:42
மொத்த நீளம்:
24:34

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேன்_நிலவு_(திரைப்படம்)&oldid=3826392" இலிருந்து மீள்விக்கப்பட்டது