தேர்வாய் கண்டிகை

தேர்வாய் கண்டிகை தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். ஏறத்தாழ 5000 மக்கள் வாழும் இந்த ஊர் திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கட்தொகை மிகுந்த ஊர்களில் இரண்டாவது இடம் வகிக்கின்றது. இவ்வூர் சென்னைக்கு வடக்கே 50 கி.மீ தொலைவில் உள்ளது. பன்னாட்டு நிறுவனமான மிச்செலின் டயர் தொழிற்சாலை இவ்வூரில் அமைந்துள்ளது.

மேலும் இவ்வூரில் உள்ள ஒரு ஏரியும் கண்ணன் கோட்டை ஏரியும் இணைக்கப்பட்டு சென்னைக்கு நீர்வழங்கும் ஐந்தாவது நீர்நிலையாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது மார்ச்சு 2020 முதல் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[1].

மேற்கோள்கள் தொகு

  1. "ChennaiWaterReservoir". DT Next. Archived from the original on 3 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 3 March 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேர்வாய்_கண்டிகை&oldid=3930059" இலிருந்து மீள்விக்கப்பட்டது