நகரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்

நகரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள நகரம் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோயில் தளமானது வரலாற்றுச் சிறப்புமிக்கது. பண்டைய பாளையக்காரர் வம்சத்தைச் சார்ந்த செமீன்கள் எனப்படும் பிரபுக்களின் ஆளுமையின் கீழ் இருந்த கோவிலாகும்.

ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கொடியேற்றத்துடன் இக்கோயில் விழா தொடங்கி தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் வழக்கம் இருந்து வருகிறது.