நவராத்திரி (திரைப்படம்)

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

நவராத்திரி 1964-இல் வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படமாகும். இத்திரைபடம் ஏ.பி.நாகராஜனால் இயக்கப்பட்டது. இதில் சிவாஜி கணேசன் கதாநாயகனாகவும், சாவித்ரி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இத்திரைபடத்தில் சிவாஜி கணேசன் ஒன்பது வேடங்களில் நடித்துள்ளார். 2008 -இல் தசாவதாரம் படம் வருவதற்கு முன்புவரை இதுவே உலக சாதனையாக இருந்தது.

நவராத்திரி
இயக்கம்ஏ. பி. நாகராசன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
சாவித்திரி
நாகேஷ்
வெளியீடுநவம்பர் 3, 1964
நீளம்4622 மீட்டர்
நாடு இந்தியா
மொழிதமிழ்

அற்புதம், பயம், இரக்கம், கோபம், சாந்தம், வெறுப்பு, சிங்காரம், வீரம் மற்றும் ஆனந்தம் ஆகிய நவரச வேடங்களில் சிவாஜி நடித்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு குணாதிசயங்கள் கொண்டதாக இப்படத்தை ஏ.பி.நாகராசன் இயக்கியுள்ளார்.

ஆதாரங்கள் தொகு

  • நூல்:புகழ் பெற்ற 100 சினிமா கலைஞர்கள், ஆசிரியர்:ஜெகாதா, பதிப்பகம்:சங்கர் பதிப்பகம்.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவராத்திரி_(திரைப்படம்)&oldid=3839316" இலிருந்து மீள்விக்கப்பட்டது