நான்கு புனித தலங்கள், இந்தியா

இந்தியாவிலுள்ள நான்கு புனிதத் தலங்கள்

நான்கு புனித தலங்கள், அல்லது சார் தாம் (Char Dham), இந்தியாவின் நான்கு திசைகளில் அமைந்துள்ள இந்துக்களின் நான்கு புனித தலங்களை குறிக்கிறது. சார் தாம் எனும் வடமொழி சொல்லிற்கு நான்கு தலங்கள் எனப் பொருளாகும். இவை நாற்பெரும் தலங்கள் அல்லது நாற்பெருந்தாம் என்றும் அழைக்கப்பெறுகின்றன. இவை நான்கும் இந்திய மண்ணின் நான்கு திசைகளில் உள்ள புனிதத் தலங்கள் என்று ஆதி சங்கரர் (பொ.ஊ. 686–717) விவரித்துள்ளார்.[1]

வடக்கில் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்த பத்ரிநாத், தெற்கில் தமிழ்நாட்டில் அமைந்த இராமேஸ்வரம், கிழக்கில் ஒடிசா மாநிலத்தின் புரி,[2][3] மேற்கில் குஜராத் மாநிலத்தின் துவாரகை ஆகிய இந்நான்கு தலங்களும் புனித தலங்கள் ஆகும்.[4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Gwynne, Paul (2009), World Religions in Practice: A Comparative Introduction, Oxford: Blackwell Publication, ISBN 978-1-4051-6702-4[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Char Dham Yatra, by G. R. Venkatraman. Published by Bharatiya Vidya Bhavan, 1988.
  3. Brockman, Norbert C. (2011), Encyclopedia of Sacred Places, California: ABC-CLIO, LLC, ISBN 978-1-59884-655-3
  4. Destination Profiles of the Holy Char Dhams, Uttarakhand
  5. Gwynne, Paul (2009), World Religions in Practice: A Comparative Introduction, Oxford: Blackwell Publication, ISBN 978-1-4051-6702-4

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Char Dham Temples
என்பதில் ஊடகங்கள் உள்ளன.