நாழிமலை என்பது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் தி. சுப்புலாபுரத்தில் உள்ள ஒரு குன்று ஆகும். இம்மலை ஒரு நாழியைக் கவிழ்த்து வைப்பது போன்று அமைந்திருப்பதால் இப்பெயர் பெற்றது. நாழிமலையில் மல்லேசுவரர் எனும் மல்லையா பெயரிலான சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[1] இந்தக் கோயிலில் நடக்கும் புரட்டாசிப் பெரும் பூசைக்கு அருகிலுள்ள கிராம மக்கள் அனைவரும் வருகின்றனர். இந்தக் கோயிலுக்குச் செல்ல படிகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இம்மலைக் கரடுகளில் காட்டுப்பன்றி போன்ற வனஉயிரினங்கள் வாழ்கின்றன.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "ஆண்டிபட்டி நாழிமலை உச்சியில் மகரதீபம் ஏற்ற முடிவு". ஜனவரி 10,2012,22:41 IST. பார்க்கப்பட்ட நாள் 27 அக்டோபர் 2012.
  2. "காட்டுப்பன்றிகளால் விவசாயநிலங்களில் பயிர்கள் சேதம்". தினமலர். பார்க்கப்பட்ட நாள் 01 நவம்பர் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாழிமலை&oldid=3577638" இலிருந்து மீள்விக்கப்பட்டது