நிரங்காரி (Nirankari) இந்தி: निरंकारी) எனில் உருவமற்ற இறைவனை வழிபடுபவர் என்று பொருள். நிரங்காரிப் பிரிவு சீக்கிய சமயத்தின் ஒரு உட்பிரிவாகும்.[1] இப்பிரிவை தற்கால சீக்கியர்கள் ஆதரிப்பதில்லை. 1980-இல் பஞ்சாபில் அகால் தக்த் சீக்கியர்களுக்கும், நிரங்காரி பிரிவு சீக்கியர்களுக்கும் ஏற்பட்ட மோதல் காரணமாக நிரங்காரி பிரிவினரை போலி நிரங்காரிகள் என அழைக்கப்பட்டனர்.[2]

நிரங்காரி
உருவாக்கம்1790களில்
சேவை பகுதி
சீக்கியம்
ஆட்சி மொழி
பஞ்சாபி
தலைவர்பாபா தயாள் சிங்
சந்த் நிரங்காரி சங்கம், புதுதில்லி

தற்கால பாகிஸ்தான் நாட்டின் [ [பஞ்சாப், பாகிஸ்தான்|பஞ்சாப்]] மாகாணத்தின் ராவல்பிண்டி நகரத்தில் பாபா தயாள் சிங் (1785-1855) என்பவர் சீக்கிய சமயத்தின் நிரங்காரி பிரிவை நிறுவினார். இவர் சீக்கியப் பேரரசர் ராஜா ரஞ்சித் சிங்கின் சமகாலத்தவர் ஆவார். [3] பாபா தயாள் பாபா தயாள் சிங்கின் வாரிசு பாபா தர்பார் சிங் என்பவர் குரு பாபா தயாள் சிங்கின் சீக்கிய சமய சீர்திருத்தக் கொள்கைகளையும்; கோட்பாடுகளையும் ராவல்பிண்டி நகரத்திற்கு வெளியே பரப்பினார். குரு சாகிப் ரத்தாஜி (1870-1909) காலத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவை பின்பற்றுபவர்களாக இருந்தனர்.[3]

1929-இல் நிரங்காரி சமயப்பிரிவில் இருந்து சந்த் நிரங்காரி இயக்கம் உருவாயின. இவ்வியக்கம் சீக்கிய சமயத்தின் முதல் பத்து குருமார்கள் தொகுத்த குரு கிரந்த சாகிப்பிற்கு பிறகு வாழும் குருவை இறைவனாக கருதினர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் நிரங்காரி சீக்கிய சமயப் பிரிவை பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்டதால், இந்தியாவில் அதன் தலைமையிடத்தை நிறுவினர்..

பின்பற்றுபவர்கள் தொகு

1891-ஆம் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இந்துக்களில் 14,001 நபர்களும்; சீக்கியர்களில் 46,610 நபர்களும் நிரங்காரி சீக்கியப் பிரிவை பின்பற்றுபவர்கள் எனத் தெரிகிறது.[4]

கொள்கைகள் தொகு

அனைத்துப் பெருமைகளும் உருவமற்ற ஒருவனுக்கே உரியதும் என்றும்; சீக்கிய முதல் பத்து குருக்களால் அருளப்பட்ட குரு கிரந்த் சாகிப் என்ற நூலே தங்களின் வேதம் என்பர். சிலை வழிபாடு, சமயச் சடங்குகள் குறிப்பாக இசுலாமிய - இந்து சமயத்தவர்களின் சமயச் சடங்குகளை பின்பற்றக் கூடாது என்பதும்; சோதிடம் பார்ப்பது, மது அருந்துவது, புகை பிடிப்பது கூடாது என்பதும் இவர்களது முக்கியக் கொள்கையாகும்.

கல்சா உணர்வு தொகு

நிரங்காரிகள் கல்சா உணர்வுடன் இருக்க தன்னிடம் ஐந்து பொருட்களை எப்போதும் தக்க வைத்துக் கொண்டும்; தன்னிடம் இருக்கக் கூடாத நான்கு தீய குணங்களை நீக்கி வைத்து கொண்டிருப்பவனாக இருத்தலே கல்சா உணர்வாகும்.

ஐந்து பொருட்கள் தொகு

நிரங்காரி சீக்கியனின் உடலில் கட்டாயம் இருக்க வேண்டிய ஐந்து பொருட்கள்;

  1. தலைப்பாகை
  2. மரச்சீப்பு
  3. இடையில் வளைந்த குறுவாள் வைத்திருத்தல்
  4. கையில் இரும்பு வளையல் அணிதல்
  5. கேஷ்ரா எனும் அரைக்கால் உள்ளாடை அணிதல்[5]

தடை செய்யப்பட்ட நான்கு தொகு

நிரங்காரி சீக்கியர்கள் செய்யக் கூடாதவைகள்;

  1. முடியை மழிக்கவோ அல்லது கையால் நீக்காதிருத்தல்.
  2. மீன் மற்றும் முட்டைகளை உண்ணாதிருத்தல்.
  3. மனைவி தவிர பிற பெண்களிடம் தகாத உறவு வைக்காமல் இருத்தல்.
  4. புகையிலைப் பொருட்கள் மற்றும் போதை மருந்துகள் பயன்படுத்தாதிருத்தல்; முரட்டு மயிர்கள் கொண்ட கம்பிளி உடைகளை அணியாதிருத்தல்.

மேற்கோள்கள் தொகு

  1. "Nirankari". Encyclopedia Britannica. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  2. "Nirankari Movement (1850's)". Archived from the original on 2016-05-16. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
  3. 3.0 3.1 McLeod, W.H. Textual Sources for the Study of Sikhism Manchester University Press ND, 1984
  4. (Census of India, 1891, Vol.XX, and vol.XXI, The Punjab and its Feudatories, by Sir Edward Douglas MacLagan, Part II and III, Calcutta, 1892, pp. & 826–9 and pp.& 572–3.)
  5. "Kashera". Archived from the original on 2017-09-16. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரங்காரி&oldid=3560764" இலிருந்து மீள்விக்கப்பட்டது