நெடுஞ்சீர் வண்ணம்

வண்ணம் என்பது இங்குத் தமிழ்ப் பாடல்களில் (செய்யுளில்) அமைந்துள்ள நடைப்பாங்கைக் குறிக்கும். இந்தப் பாநடைப் பாங்கால் செய்யுளின் இசைப்பாங்கு வேறுபடும்.

நெடுஞ்சீர் வண்ணம் என்பது செய்யுளில் நெடில் எழுத்துக்கள் மிகுதியாகப் பயின்று நடக்கும் பாங்கு.

நீரூர் பாண யாறே காடே
நீலூர் காயாப் பூவி யானே
காரூர் பாண மாவே யானே
யாரோ தாமே வாழா மோரே
ஊரூர் பாகா தேரே
பீரூர் தோளாள் பேரூ ராளே [1]
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு [2]

இவற்றையும் காண்க தொகு

அடிக்குறிப்பு தொகு

  1. யாப்பருங்கல விருத்தி மேற்கோள்
  2. திருக்குறள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெடுஞ்சீர்_வண்ணம்&oldid=1106407" இலிருந்து மீள்விக்கப்பட்டது