யாப்பருங்கலம்

தொல்காப்பியத்துக்குப் பின்னர் செய்யுளுக்கு இலக்கணம் கூற எழுந்த நூல்களுள் சிறப்பானவையாகப் போற்றப்படும் நூல்களுள் யாப்பருங்கலம் என்னும் நூலும் ஒன்று. இதை இயற்றியவர் அமிதசாகரர் என்னும் சமண முனிவர். யாப்பருங்கலக் காரிகை என்னும் இன்னொரு யாப்பிலக்கண நூலை எழுதியவரும் இவரே. இந் நூலின் காலம் 11 ஆம் நூற்றாண்டு. இவர் இயற்றிய மற்றொரு நூல் அமுதசாகரம்.

இந்த நூலுக்கு மிக விரிவான விருத்தியுரை எழுதப்பட்டுள்ளது. இதை எழுதியவர் அமிதசாகரரின் மாணாக்கராகிய குணசாகரர் [1] என்று கூறப்படுகின்றது.யாப்பருங்கலம் என்பது யாப்பு என்னும் கப்பல். குணகடல் பெயரோன் (குணசாகரன்) அந்தக் கப்பலைக் கட்டித் தமிழ்க்கடலில் ஓட்டிச் சென்றான் என்று யாப்பருங்கல விருத்தியுரை [2] கூறுகிறது.[3]

பாகுபாடு தொகு

இந்த நூல்

  1. பாயிரம்
  2. உறுப்பியல்
  3. செய்யுளியல்

என்று மூன்றாகப் பகுத்துக்கொண்டு செய்திகளைக் குறிப்பிடுகிறது.

மேற்கோள் தொகு

  1. குண கடல் பெயரோன் - என்று இவரது பெயரைப் பாயிரம் குறிப்பிடுகிறது.
  2. யாப்பருங்கலம் சென்னை (அப்போதைய தமிழ்நாடு) அரசு வெளியீடு, 1960
  3. முழுதுலகு இறைஞ்ச முற்று ஒருங்கு உணர்ந்தோன்

    செழுமலர்ச் சேவடி செவ்விதின் வணங்கி
    பாற்படு தென் தமிழ்ப் பரவையின் வாங்கி
    யாப்பருங்கலம் நனி யாப்புற வகுத்தோன்
    தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த
    குணகடல் பெயரோன் கொள்கையின் வழாஅத்
    துகளறு வேள்வித் துகள் தீர் காட்சி
    அளப்பு அரும் கடல் பெயர் அரும் தவத்தோனே

"https://ta.wikipedia.org/w/index.php?title=யாப்பருங்கலம்&oldid=3448174" இலிருந்து மீள்விக்கப்பட்டது