நேசமணி ஜோன்

நேசமணி ஜோன் (பிறப்பு: டிசம்பர் 9, 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவர் ஆவார். இவர் மலாக்கா தமிழர் சங்கத்தில் மாதர் பகுதித் தலைவியும், மலாக்கா பயனீட்டாளர் சங்கத்தில் செயற்குழு உறுப்பினரும், கிறிஸ்த்துவ தமிழ் சபையின் வட்டாரத் தலைவியும், மலாக்கா சிலம்பக் கழகத்தின் ஆலோசகருமாவார்.

எழுத்துத் துறை ஈடுபாடு தொகு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், தொடர்கதைகள், ஆன்மீக மற்றும் தன்முனைப்புக் கட்டுரைகள் எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

பரிசில்களும் விருதுகளும் தொகு

  • எழுத்துப் பணிக்குப் பல மேடைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
  • டத்தோ பத்மநாதன் இலக்கிய விருது பெற்றுள்ளார் (1990)

உசாத்துணை தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=நேசமணி_ஜோன்&oldid=3218989" இலிருந்து மீள்விக்கப்பட்டது