பத்மாவதி விவேகானந்தன்

பத்மாவதி விவேகானந்தன் (பிறப்பு: நவம்பர் 10, 1955) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் ”காலந்தோறும் மானுடம்”, “தகழியின் நாவல்கள் ஓர் ஆய்வு”, “தமிழாக்கம் பெற்றுள்ள மலையாள நாவல்களின் போக்குகள்” எனும் நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "உன்னை அறிந்தால்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2000 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்மாவதி_விவேகானந்தன்&oldid=3614060" இலிருந்து மீள்விக்கப்பட்டது