பயனர்:Anbu1974/மணல்தொட்டி

வானவன் மாதேவீச்வரம் தொகு

மானாம்பதிக்கு வானவன் மாதேவீச்வரம் என்ற சிறப்புப் பெயருண்டு. இந்த முதல் பெயர் நாளடைவில் மருவி மானாம்பதி என்றாயிற்று.இவ்வூரில் ஒவ்வொரு நாளும் ஊடும் பாவும் இழைத்து மணக்கும். இவ்வூரின் உயிர் மூச்சு நெசவு. வேட்டிகள் இவ்வூரின் பெருமையினை எடுத்தியம்பு அளவிற்கு பெருமை படைத்தது.

உத்திரமேரூருக்கு அருகே வந்தவாசிப் பாதையில் அமைந்ததுள்ள இந்த ஊர், தோராயமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. சுந்தர சோழர் மனைவியும் முதலாம் இராஜஇராஜனின் தாயாருமான வானவன் மாதேவி பெயரால் ஏற்பட்ட இந்த ஊரில், வானவன மாதேவீச்சரம் என்ற திருக்கோயில் இருக்கிறது. இக்கோயில் பல்லவர் காலத்தில் எழுப்பப்பட்டுச் சோழர்களால் மேம்படுத்துப்பட்டது. இக்கோயிலில் எழுந்தருளியுள்ள வானசுந்தரேசுவர சாமி இந்தராணிக்குக் காட்சி தந்தார் என்கிறது தல புராணம்.

இந்த ஊரின் உயிர் மூச்சு நெசவுத் தொழிலாகும். இங்கே நெய்யப்படும் வேட்டிகள் மிகவும் பேர் பெற்றவை. தரம் நிறைந்த இழைகளால், நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டவை. தமிழ அரசின் பரிசுகளைப் பலமுறை பெற்ற பெருமை மானாம்பதி வேட்டிகளுக்கு உண்டு.

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய மாட்டுச் சந்தை கொண்ட ஊர்இவ்வூர். இங்கே கூடும் சந்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடிய ஊரையே கலகலக்க வைப்பார்கள். ஒவ்வொரு வியாழனன்றும் மானாம்பதி சந்தை தவறாமல் நடந்து வருகிறது. இச்சந்தையில் அனைத்து வகையான காய்கறிகள், மளிகைப்பொருட்கள், துணிமணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கைத் தேவையான அனைத்து பொருட்களையும் இங்கே வாங்கலாம். இவ்வூராட்சிக்கு இச்சந்தையின் மூலம் அதிக வருமானம் வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே அதிகமான ஆசிரியர்களை வழங்கியிருப்பது இம்மானாம்பதியே என்றால் அது மிகையல்ல, தொடக்கப்பள்ளியிலிருந்து பல்கலைக்கழகங்கள் வரை மானாம்பதி ஆசிரியர்கள் நாடு தழுவிப் பணியாற்றி வருகின்றனர்.

மானாம்பதியில் காலையிலும் மாலையிலும் காக்கை குருவிகளின் இரைச்சலைத் தாங்கவே முடியாது. தரைப்பறவைகள் ஆயிரக்கணக்கில் இங்கு வந்து தங்கி ஆரவாரம செய்கின்றன.

மானாம்பதியில் உள்ள பஞ்சாயத்துப் பழத்தோட்டம் உண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Anbu1974/மணல்தொட்டி&oldid=2273149" இலிருந்து மீள்விக்கப்பட்டது