பயனர்:DEE SATHISH.D VPM/மணல்தொட்டி/1
==ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தம சுவாமிகள் மூல பிருந்தாவனம்==
இந்தியாவில் பிறந்து,வாழ்ந்து, பின் ஜீவசமாதி அடைந்த மகான்கள் பலர். அவர்களுள் முக்கியமான ஒருவர் திருக்கோவிலூர் மணம்பூண்டியில் அருள்புரியும் ஸ்ரீ ஸ்ரீ ரகூத்த சுவாமிகள் ஆவார். இவ்விடம் ஸ்ரீ ஸ்ரீ ரகூத்த சுவாமிகள் மூல பிருந்தாவனம் ஆகும். இவர் ஸ்ரீ மத்வாச்சார்யர் தோற்றுவித்த மடங்களில் ஒன்றான ஸ்ரீ உத்திராதி மடத்தின் [1] 14 வது அதிபதியாக கருணை நிரம்பிய மகானாக வாழ்ந்தவர்.
பிறப்பு தொகு
உத்திராதி மடத்தின் 13வது அதிபதியாக விளங்கியவர் ஸ்ரீ ரகுவர்ய தீர்த்தர் ஆவார்.அவருக்கு பின் மடத்தை வழிநடத்த சிறந்த சீடன் இல்லாததை எண்ணி வருத்தப்பட்டு தன் மூத்த குருவான ஸ்ரீ மத்வாச்சார்யரை வேண்டினார். அதன் பலனாக குரு, ரகுவர்யர்யரின் கனவில் தோன்றி சில உத்தரவுகளை பிறப்பித்தார்.அதன் படி ஸ்ரீ ரகுவர்யர்யர் ஜதராபாத் சமஸ்தானத்தில் உள்ள ஸ்வர்ணவாடி என்ற சிற்றூருக்கு விஜயம் செய்தார். தங்கள் ஊருக்கு வந்த மகானை குழந்தை பாக்கியம் இல்லாத அந்தண தம்பதியினரான சுப்ப பட்டர் ,கங்காபாய் சந்தித்து குழந்தை செல்வம் வேண்டினர். ஸ்ரீரகுவர்யர் அவர்களுக்கு குழந்தை வரம் அருள்வதாகவும் ஆனால் பிறக்கும் குழந்தையை மடத்திற்காக தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்ற நிபந்தனையை விதித்தார். புத்திரப் பாக்கியத்திற்கு ஏங்கிய அவர்களும் உறுதியளித்தனர்.
வெகு விரைவிலேயே கங்காபாய் கருவுற்று, குழந்தை பிறக்கும் சமயம் வந்தது.மகானின் உத்தரவின் படி குழந்தை பிறந்தவுடன் தரையில் படாமல் தங்கத்தட்டில் ஏந்தி, மடத்திற்கு எடுத்து வந்து இராமச்சந்திரன் என பெயர் சூட்டப்பட்டு இறைவன் ஸ்ரீராமர் சிலைக்கு அபிஷேகம் செய்த பால் குழந்தைக்கு கொடுக்கப்பட்டது.
சன்னியாசம் ஏற்றல் தொகு
இராமச்சந்திரனுக்கு ஏழு வயதில் உபநயனம் தரித்து, எட்டு வயதில் சன்னியாசம் வழங்கப்பட்டு ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
சிறுவயதிலேயே வேதம், உபநிஷத்துகள் எல்லாம் கற்று தேர்ந்தார். மர நிழலை கூட ஒதுக்கி பற்றற்று வாழ்ந்தார்.
உத்திராதி மடத்தின் அதிபதியாதல் தொகு
ஸ்ரீ ரகூத்தம தீர்த்தரின் குரு, ஸ்ரீரகுவர்ய தீர்த்தர் இறைவனடி சேர்ந்ததும், மடத்தின் 14வது அதிபதியானார். பல நூல்களை இயற்றினார். சாதி, மத வேறுபாடின்றி மக்களின் துயர் தீர்த்தார்.
மணம்பூண்டியில் பிருந்தாவனம் அமைத்தல் தொகு
தன் பணிகளை முடித்ததாக கருதிய ஸ்ரீ ரகூத்தம தீர்த்தர், இறுதியாக பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றான திருக்கோவிலூர் நகரின் தென்பெண்ணை நதிக்கரையில் உள்ள மணம்பூண்டி என்ற புனிதமான இடத்தில் பிருந்தாவனம் அமைத்தார். கி.பி 1595 வைகுண்ட ஏகாதேசி அன்று ஜீவசமாதி அடைந்தார்.
பிருந்தாவனத்தின் சிறப்புகள் தொகு
பிருந்தாவனத்தை வலம் வந்து வணங்கும் பக்தர்களுக்கு சுவாமிகளின் அருள் கிடைக்கிறது. தமிழகம், கர்நாடகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் வந்து வணங்கி, சுவாமிகளின் அருள் ஆசியை பெற்று செல்கின்றனர். ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதேசி சமயத்தில் நான்கு நாட்களுக்கு ஆராதனை விழா சிறப்பாக நடைபெறும். சுவாமியை வணங்கி குறைகள் நீங்கப்பெற்ற பக்தர்களே, மகானின் சக்திக்கு சாட்சியாவர். பிருந்தாவனத்திற்கு சென்று நெய்தீபம் ஏற்றி, 11 முறை வலம் வந்து வழிபட்டால் கொடிய கிரக தோஷங்களும், துன்பங்களும் விலகும் என்பதில் வியப்பில்லை. தற்போது இந்த ஸ்ரீஉத்திராதி மடத்தின் 42 வது பீடாதீபதியாக ஸ்ரீ ஸத்யாத்ம தீர்த்த சுவாமிகள் இருந்து வருகிறார்.
மாவட்டம் | விழுப்புரம் |
---|---|
ஊர் | திருக்கோவிலூர் |
இடம் | தென்பெண்ணையாற்றின்
பாலத்தை அடுத்துள்ள மணம்பூண்டி |
தரிசன நேரம் | காலை 5.00 முதல் மதியம் 12.00 வரை
மாலை 4.30 முதல் இரவு 8.00 வரை |
தொடர்புக்கு | 04153-224690 |
வெளி இனணப்புகள் தொகு
- ↑ "ஸ்ரீ ஸ்ரீ ரகூத்தம சுவாமிகள் மூல பிருந்தாவனம்". பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2017.