பலவின்பால்

தமிழ் இலக்கணம் பெயர்ச்சொற்களை உயர்திணை, அஃறிணை எனப் பகுத்துக்கொண்டுள்ளது. எண்ணிக்கையைப் பொருத்து அஃறிணையை ஒன்றன்பால், பலவின்பால் என இரண்டாகக் கொள்கிறது.

  • அவை, இவை, உவை, - சுட்டுப்பெயர் [1]
  • யாவை - வினாப்பெயர் [2]
  • வந்தன, வாரா, வருவ என்பன போல் அ, ஆ, வ என முடியும் வினைச்சொற்கள் பலவின்பாலை உணர்த்தும். [3]
    • மான்கள், கற்கள் எனக் 'கள்' சேர்த்து எழுதப்படுவதை நன்னூல் குறிப்பிடுகிறது.
    • 'மான் மேய்ந்தன' என எழுதி வினைமுடிவால் பலவின்பாலை உணர்த்துவது மிகப்பழந் தமிழ்நடை.[4] அத்தகைய பெயர்களைப் பால்பகா அஃறிணைப் பெயர்கள் என்பர்.[5]

மேலும் மகிழ்ச்சி, உயர்வு, சிறப்பு, கோபம், இழிவு ஆகியவற்றைக் காட்டும் பொருட்டு எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே பால் மாறுவதைப் பால்வழுவமைதி கூறி ஏற்பர்.[6][7]

அடிக்குறிப்புகள் தொகு

  1. தொல்காப்பியம் பெயரியல் 13
  2. தொல்காப்பியம் பெயரியல் 13
  3. தொல்காப்பியம் வினையியல் 19
    • அகர முதல எழுத்து எல்லாம் - என்று தொடங்கும் திருக்குறளில் 'எழுத்து' என்னும் ஒருமை உணர்த்தும் சொல் 'எழுத்துகள் எல்லாம்' என்னும் பன்மைப் பொருளை உணர்த்தி 'முதல' என்னும் பன்மை முடிபு கொண்டுள்ளது. 'பகவன் முதற்று' என்னும் உயர்திணைத் தொடரில் ஒருமை ஒருமை-முடிபு கொண்டுள்ளது.
    • வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல (திருக்குறள் 1100) பன்மை
    • படிறு இல ஆம செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் (திருக்குறள் 91) - இதில் 'வாய்ச்சொல்' என்பது ஒருமை. 'இல' என்பது பன்மை.
  4. "பால்பகா அஃறிணைப் பெயர்கள்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 04 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "பால்". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 03 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. "பால்வழுவமைதிக்கான காரணங்கள் யாவை?". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 03 சனவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பலவின்பால்&oldid=3577725" இலிருந்து மீள்விக்கப்பட்டது