பாயிரத்தின் இன்றியமையாமை

ஒரு நூலுக்கு பாயிரம் என்பது எவ்வளவு அவசியமானது என்பதை நன்னூலானது பாயிரத்தின் இன்றியமையாமையில் விளக்குகிறது. நன்னூலின் பாயிரவியலில் சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் கூறும் நூற்பாக்களில் பாயிரத்தின் இன்றியாமை குறித்து கூறப்பட்டுள்ளது.

நன்னூல் கூறுவது யாதெனில்:

"ஒரு நூல் பலவகைப் பெருமைகளைத் தன்னகத்தே கொண்டு விரிந்து பரந்த நூலாக இருந்தாலும் பாயிரம் என்று அழைக்கப்படும் முன்னுரை அல்லது முகவுரை நூலில் இல்லாவிட்டால் அது நூலாகவே கருதப்படாது".[1]

அடிக்குறிப்புகள் தொகு

  1. ஆயிர முகத்தான் அகன்ற தாயினும்

    பாயிர மில்லது பனுவல் அன்றே.

    - நன்னூல் (54)

வெளி இணைப்புகள் தொகு