பாரசீகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு

ஈரான் மீதான மங்கோலியப் படையெடுப்பு

பாரசீகம் மீதான மங்கோலியப் படையெடுப்பானது 1219 முதல் 1256 வரை நடைபெற்றது. மத்திய கிழக்கு மற்றும் நடு ஆசியாவிலிருந்த இஸ்லாமிய அரசுகளுக்கு எதிரான மூன்று மங்கோலியப் படையெடுப்புகளை இது உள்ளடக்கியுள்ளது. குவாரசமிய அரசமரபு, நிசாரி இசுமாயிலி அரசு மற்றும் பகுதாதுவின் அப்பாசியக் கலீபகம் ஆகிய அரசுகளின் அழிவுக்கு இந்தப் படையெடுப்புகள் இட்டுச் சென்றன. இவற்றுக்குப் பதிலாகப் பாரசீகத்தில் மங்கோலிய ஈல்கானரசு அரசாங்கமானது நிறுவப்பட்டது.[2][3][4]

பாரசீகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு
மங்கோலியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி

பகுதாது முற்றுகை (1258), இப்போரில் மங்கோலியர்கள் பாரசீகம் மீதான தங்களது மேலாதிக்கத்தைத் தீர்க்கமாக உறுதிப்படுத்தினர்
நாள் 1219–1258
இடம் நடு ஆசியா, பாரசீகம் (ஈரான்), ஆப்கானித்தான்
மங்கோலிய வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
ஈரான் மற்றும் நடு ஆசியாவை மங்கோலியப் பேரரசு அடக்கியது
பிரிவினர்
மங்கோலியப் பேரரசு
தளபதிகள், தலைவர்கள்
இழப்புகள்
தெரியவில்லை 17 இலட்சம்-1.50 கோடி மக்கள்[1]

உசாத்துணை தொகு