பித்துரு உலகம்
கருத்துருக்கள் |
---|
சடங்குகள் |
பித்துரு உலகம் அல்லது பித்ரு லோகம் (Pitru loka) என்பது இந்து தர்மத்தின் படி, உடலைத் துறந்த ஆன்மாக்கள் மறு பிறப்பின் போது, வேறு உடல் கிடைக்கும் வரை காத்திருக்கும் இடமாகும். [1]இதனை பிரேத லோகம் என்றும் அழைப்பர்.[2] பித்துரு லோகம் பூமிக்கும், அந்தரிட்சத்திற்கும்[3][4] நடுவில் இருப்பதாக பாகவத புராணம் (காண்டம் 5, அத்தியாயம் 24) கூறுகிறது. [5]
இந்து சமய நம்பிக்கைகளின் படி, உடலை நீத்த ஆன்மா முற்பிறவியில் செய்த புண்ணிய - பாவ கர்மவினைகளுக்கு ஏற்ப, நரகத்தையும், சொர்க்கத்தையும் அனுபவித்து, செய்த பாவ - புண்ணியங்கள் தீர்ந்த பின்னர், பித்துரு லோகத்தில் மறு பிறவிக்கான உடல் கிடைக்கும் வரை தங்கியிருப்பர். பித்துரு லோகத்தினர் முற்பிறவியில் செய்த கருமவினைகளுக்கு ஏற்ப, மீண்டும் மனிதப் பிறவியாகவோ அல்லது வேறு பிறவியாகவோ பிறப்பர்.
மேற்கோள்கள் தொகு
வெளி இணைப்புகள் தொகு
- Birth and Death பரணிடப்பட்டது 2016-09-10 at the வந்தவழி இயந்திரம்