பிரார்த்தனை

பிரார்த்தனை, செபம் அல்லது மன்றாடல் என்பது ஒரு வேண்டுகோள் அல்லது செயலாகும். இது வழிபாட்டு இலக்குடன் தொடர்பு கொண்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலைச் செயல்படுத்த முற்படுகிறது.

ஆல்பிரெஃக்ட் டியுரேவின் பிரார்த்தனை செய்யும் கைகள் ஓவியம் 

பிரார்த்தனை என்பது மத நடைமுறையின் ஒரு வடிவமாக இருக்க முடியும். இது பொது அல்லது தனிப்பட்ட முறையில் நடக்கலாம். இது வார்த்தைகள், பாடல் அல்லது முழுமையான மௌனத்தை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். மொழி பயன்படுத்தப்படும் போது பிரார்த்தனை ஒரு பாடல் வடிவம், மந்திரம், முறையான நம்பிக்கை அறிக்கை, அல்லது பிரார்த்தனை நபரின் ஒரு தன்னிச்சையான சொற்பொழிவு ஆக இருக்கலாம். வேண்டுகோள், பிரார்த்தனை விண்ணப்பம், நன்றி மற்றும் புகழ்பாடுதல் எனப் பிரார்த்தனையின் வெவ்வேறு வடிவங்கள் உள்ளன. பிரார்த்தனையானது ஒரு தெய்வம், ஆவி, இறந்தவர் அல்லது உயர்ந்த யோசனை, வழிபாட்டிற்கான நோக்கம், வழிகாட்டுதல் கோருதல், பாவங்களை ஒப்புக்கொள்ளுதல் அல்லது ஒருவரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துதல் ஆகியவற்றை நோக்கி இருக்கலாம். எனவே, தனிப்பட்ட நன்மைக்காக அல்லது மற்றவர்களுக்காக எனப் பல காரணங்களுக்காக மக்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரார்த்தனை&oldid=3938926" இலிருந்து மீள்விக்கப்பட்டது