பி. இரத்தினசபாபதி

திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள்

பி. இரத்தினசபாபதி (பிறப்பு: 1941) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருநெல்வேலி மாவட்டம், தென்காசியில் பிறந்த இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளார். இவர் தமிழிலக்கியம், தமிழ் மருத்துவம் தொடர்பாக 15க்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார். தமிழ்ப் பாடநூல் குழுக்களில் தலைமையேற்றுள்ளார். இவர் முனைவர் சு. வசந்தியுடன் சேர்ந்து எழுதிய “கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு )” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் கல்வியியல், உளவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._இரத்தினசபாபதி&oldid=3614101" இலிருந்து மீள்விக்கப்பட்டது