புழல் ஏரி

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள ஒரு நீர்த்தேக்கம்

புழல் ஏரி அல்லது செங்குன்ற ஏரி (Pulhal Lake அல்லது Red Hills Lake) என்றழைக்கப்படும் நீர்த்தேக்கமானது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி வட்டத்தில் புழல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. சென்னைக்கு குடிநீர் விநியோகிக்கப்படும் மூன்று ஏரிகளில் இது ஒன்றாகும்;[1] மற்றவை செம்பரம்பாக்கம் ஏரியும் மற்றும் சோழவரம் ஏரியுமாகும். இது மழைநீர் பிடி நீர்த்தேக்கமாகும். இதன் முழு கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி[2] (93 மில்லியன் மீ3). இங்கு அமைக்கப்பட்டுள்ள பூங்கா ஒரு சுற்றுலா இடமாக விளங்குகிறது.

புழல் ஏரி
அமைவிடம்புழல், பொன்னேரி வட்டம், திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்13°09′43″N 80°10′38″E / 13.1620°N 80.1771°E / 13.1620; 80.1771
வகைநீர்த்தேக்கம்
வடிநில நாடுகள்இந்தியா
மேற்பரப்பளவு4,500 ஏக்கர்கள் (18 km2)
நீர்க் கனவளவு3,300 மில்லியன் கன அடி
கடல்மட்டத்திலிருந்து உயரம்55 மீட்டர்

மேற்கோள்கள் தொகு

  1. "புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மேம்பாடு திட்ட அறிக்கை தயாரிக்க ஏற்பாடு - Dinamalar Tamil News". Dinamalar. 2023-05-30. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.
  2. "சென்னை புழல் ஏரி முழு கொள்ளளவை நெருங்கியதால் நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை". News18 Tamil. 2021-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-08-24.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puzhal Lake
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=புழல்_ஏரி&oldid=3780531" இலிருந்து மீள்விக்கப்பட்டது