பேச்சு:ஐயப்பன்

ஐயப்பன் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஐயப்பன் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஐயப்பன் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஐயப்பன் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


திருத்தி எழுதப்பட வேண்டும் தொகு

பதினாறாம் நுற்றாண்டில் அப்பைய தீக்ஷிதர் என்ற மகான் ஒருவர் இருந்தார். அவர் சிறந்த அத்வைதியாயினும் சிவ வழிபாட்டை சிறப்பாக வளர்த்துக் கொடுத்தவர். அவருடைய காலத்தில் சைவத்தை மட்டம் தட்டியும் சிவனடியார்களை எதிர்த்தும் விஷ்ணு வழிபாடு "agressive" என்று சொல்லக் கூடிய தீவிர வழியிலேயே பரப்பப் பட்டு வந்தது. இதனால் எதிர் நடவடிக்கையாக சிவ வழிபாட்டை பரப்பும்படியாயிற்று.

அவருக்கு சம காலத்தவராகிய தாத்தாச்சாரியார் என்பவர் விஜய நகர ராஜ வம்சத்தின் கடைசி அரசர்களிடம் பெரிதும் செல்வாக்கு பெற்றுத் தீவிரமாக வைஷ்ணவப் பிரச்சாரம் செய்ததோடல்லாமல், சிவ வழிபாட்டை எள்ளி நகையாடியதன் காரணமாகத்தான் அப்பைய தீக்ஷிதர் சைவத்தை நிலை நாட்டினார். மற்றபடி தாதாச்சரியாருக்கு இருந்த சிவ வெறுப்பைப் போல் இவருக்கு சிறிதும் வைஷ்ணவ வெறுப்பு இருந்ததில்லை. அதை அவர் இயற்றிய பல ஸ்லோகங்களில் காணலாம்.

ஒரு சமயம் தீக்ஷிதர் மற்றும் தாதாச்சர்யாருடன் விஜய நகரத்து மன்னர் ஒரு கோவிலுக்குப் போனார். அந்தக் கோவிலில் ஐயப்ப சாஸ்தாவின் சிலை இருந்தது. அது மற்ற கோவில்களில் உள்ள ஐயப்ப சிலைகளைப் போலல்லாமல் சாஸ்தா, தனது மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு மிகவும் கவலையுடன் எதையோ யோசிப்பது போலிருந்தது. சாஸ்தா சிலை அவ்வாறு இருப்பதற்கான காரணத்தை ராஜ விசாரித்தார். கோவிலை சேர்ந்தவர்கள், இது பல நுற்றாண்டுகளுக்கு முன்பு செய்யப் பட்ட சிலையாகும். இந்த சிலையை செய்த சிற்பிக்கு ஐயப்ப சாஸ்தா ஏதோ ஒரு விஷயமாக இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பது போலக் காட்சியளித்தார். அந்த சிற்பியும், தனக்கு தரிசனம் கிடைத்த நிலையிலேயே இந்த சிலையை செய்துவிட்டார். பிற்காலத்தில், அணுத்து விதத்திலும் தகுதி வாய்ந்த பெரியவர் ஒருவர் இங்கே வருவார். அவர் சாஸ்தாவின் யோசனை எதைப் பற்றி என்ற ரகசியத்தை எடுத்துரைப்பார். அப்போது இந்த சிலையும் மூக்கின் மேலுள்ள விரலை எடுத்துவிட்டு எல்லாக் கோவில்களிலும் இருப்பது போல் ஆகிவிடும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். பிறகு எத்தனையோ பெரியவர்கள் இங்கே வந்து சாஸ்தாவின் கவலைக்கு பல காரணங்களைக் கூறிவிட்டார்கள். ஆனால் எதுவும் சரியான காரணமாக இல்லாததால் சாஸ்தா விரலை எடுக்காமலே உள்ளார். என்றார்கள்.

ராஜா உடனே தாதாச்சர்யாரைப் பார்த்தார். அவர் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்டு தாமும் ஒரு காரணத்தைக் கற்பித்து ச்லோகமாகக் கூறினார்.

         "விஷ்ணோ : ஸுதோஹம் விதிநா ஸமோஹம் 
     தன்யஸ் - ததோஹம் ஸுரஸேவிதோஹம் ||
           ததாபி பூதேச ஸுதோஹம் ஏதைர்
     பூதைர் - வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||

இதன் பொருள் : "நான் விஷ்ணுவுக்கு மகன். ஆகையால் பிரம்மாவுக்கு சமமானவன். இதனால் நான் பெருமையடைகிறேன். தேவர்கள் அனைவராலும் வணங்கப் படுகிறேன். ஆனாலும்,நான் சிவனுக்கும் மகன் - ததாபி பூதேச ஸுதோஹம் ...... சிவனுக்கு எத்தனையோ பெயர்கள் உள்ளன. சிவன், சம்பு, சங்கரன், பசுபதி என்றெல்லாம் இருக்க பூதேசன் என்ற பெயரே ஸ்லோகத்தில் சொல்லப் பட்டுள்ளது. பூதக் கூட்டங்களின் தலைவன் என்று ஈஸ்வரனைக் குறிப்பிட்டு அப்படிப் பட்டவனின் பிள்ளையாகவும் நான் இருக்கிறேனே .....என்று ஐயப்ப சுவாமி வருத்தம் கொள்வது போல் ஸ்லோக வாக்யம் போகிறது. சாஸ்தாவே இதை சொல்வது போல் ஸ்லோகத்தை அமைத்துள்ளார்.இதிலேயே தாதாச்சர்யாருக்கு சிவ சம்பந்தமான விஷயங்களில் நல்ல அபிப்பிராயம் இல்லை என்பது தெரிய வரும்.இந்த ஸ்லோகத்தைக் கேட்டு சாஸ்தாவின் விக்ரஹம் முக்கின் மேல் இருந்த விரலை எடுத்துவிடவில்லை.


தாதாசார்யார் சொன்ன காரணத்தைக் கேட்டு சாஸ்தா விரலை எடுக்கமலிருந்த உடன் ராஜா அப்பைய திக்ஷிதரைப் பார்த்தார்.

உடனே அப்பைய தீக்ஷிதர், சாஸ்தாவின் யோசனைக்கான காரணத்தை ஒரு ஸ்லோக உருவில் வடித்தார். இவரும் சாஸ்தா சொல்வது போலவேதான் ஸ்லோகம் அமைத்தார்.

அது என்ன ஸ்லோகம் என்றால்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஐயப்பன்&oldid=3890382" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஐயப்பன்" page.