மகாநாகன் (இலங்கை மௌரியர்)

மகாநாகன் (பொ.பி. 561 - 569) என்பவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் பதிரெண்டாம் மன்னனாவான். இவன் இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் பதினொன்றாமானவனும் தன் தூரத்து முறை பேரனுமானவனான குட்ட கீர்த்தி மேகன் என்பவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான்.

சிலாகாலன் தொகு

மூலக்கட்டுரை - சிலாகாலன்

இலங்கை மௌரிய மன்னர்கள் வம்சத்துள் எட்டாம் மன்னனான சிலாகாலன் தன் ஆட்சியில் தன் மூத்த மகனான இரண்டாம் மொக்கல்லானன் கிழக்கிலங்கை நாடுகளுக்கும், இரண்டாம் மகனான தாட்டாபூபதியை இலங்கையின் மலைய நாட்டிற்கும், மூன்றாம் மகனான உபதிச்சனை தன் அரசவையில் முக்கிய அதிகாரியாகவும், தன் அமைச்சனும் வழிப்பறிக் கொள்ளைக்காரனுமான இந்த மகாநாகனை உராகணம் நாட்டிற்கும் அதிபதிகள் ஆக்கினான். இவனுக்குப் பிறகு இவனுடைய இரண்டாம் மகனான தாட்டாபூபதி இரண்டாம் மொக்கல்லானனுக்கு முறைப்படிச் சேர வேண்டிய ஆட்சியை பறித்துக் கொண்டு இலங்கையை அரசாண்டான்.

உள்நாட்டுப் போர்கள் தொகு

இதை சிலாகாலனின் இளைய மகனும் தாட்டாபூபதியின் தம்பியுமான உபதிச்சன் கண்டித்ததால் அவனைத் தாட்டாபூபதி கொன்று விட்டான். இதையறிந்த இந்த இரண்டாம் மொக்கல்லானன் கிழக்கிலங்கை நாட்டிலிருந்து படையெடுது வந்தான். இதனால் பெரிய போர் நடந்து பெரும் உயிர்ச்சேதம் நடக்கும் என்பதால் இருவரும் ஒருவரோடு ஒருவர் மட்டும் யானைப் போரில் ஈடுபட்டனர். இதில் தோல்வியை சந்தித்த தாட்டாபூபதி தற்கொலை செய்து கொண்டதால் அதன் பிறகு முறைப்படி இந்த இரண்டாம் மொக்கல்லானன் இலங்கையை அரசாண்டான்.[1] இவனுக்குப் பிறகு இவனுடைய மகனான இந்த குட்ட கீர்த்தி மேகன் இலங்கையை அரசாண்டான். இந்த கீர்த்தி மேகனின் ஆட்சி சரிவர நடக்காததைக் கண்டதும் கீர்த்தி மகனின் பாட்டனான சிலாகாலன் ஆட்சியில் தண்டலதிகாரியாகவும் ரோகண அமைச்சனாகவும் இருந்த இந்த மகாநாகன் இவன் மீது படையெடுத்து இவனைக் கொன்று இலங்கையை அரசாண்டான்.

மேற்கோள்கள் தொகு

  1. சூல வம்சம், 41ஆம் பரிச்சேதம், 26-89

மூலநூல் தொகு