மயிலை சீனி. வேங்கடசாமி

எழுத்தாளர், வரலாற்று ஆசிரியர்

மயிலை சீனி. வேங்கடசாமி[1] (Mayilai Seeni. Venkatasami, திசம்பர் 16, 1900 – சூலை 8, 1980) ஒரு தமிழறிஞரும், எழுத்தாளருமாவார். தமிழக வரலாறு பற்றி பல அரிய ஆய்வு நூல்களை எழுதியவர்.

மயிலை சீனி. வேங்கடசாமி
பிறப்பு(1900-12-16)16 திசம்பர் 1900
மயிலாப்பூர், சென்னை
இறப்புசூலை 8, 1980(1980-07-08) (அகவை 79)
அறியப்படுவதுதமிழறிஞர், எழுத்தாளர்

வாழ்க்கைக் குறிப்பு தொகு

வேங்கடசாமி சென்னையின் மயிலாப்பூர் பகுதியில் 1900-இல் பிறந்தார். அவரது தந்தை ஒரு சித்த மருத்துவர். வேங்கடசாமியின் மூத்த அண்ணன் தந்தையைப் போல சித்த மருத்தவரானார். இரண்டாவது அண்ணன் சீனி. கோவிந்தராஜன் ஒரு தமிழறிஞர். திருக்குறள் காமத்துப்பால் நாட்கள், திருமயிலை நான்மணி மாலை ஆகிய படைப்புகளை எழுதியவர். வேங்கடசாமி கோவிந்தராஜனிடம் தமிழ் பயின்றார். பின் மகாவித்வான் சண்முகம் பிள்ளை, பண்டித சற்குணர் ஆகியோரிடம் தமிழ் படித்தார். பின்னர் நீதிக்கட்சி நடத்திய திராவிடன் இதழின் ஆசிரியர் குழுவில் பணிக்குச் சேர்ந்தார். ஓவியக்கலையில் கொண்ட ஆர்வத்தால் சில காலம் எழும்பூர் ஓவியப் பள்ளியில் படித்தார். குடும்பப் பொருளாதாரச் சூழல் காரணமாக ஆசிரியர் பயிற்சி பெற்று சாந்தோம் மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.

தனது விடுமுறை நாட்களில் தமிழகமெங்குமுள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களுக்கும், வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று ஆய்வு செய்தார். தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல் ஆகிய துறைகளில் அரிய களப்பணியாற்றினார். தென்னிந்திய எழுத்து முறைகள் யாவற்றையும் கற்றுத் தேர்ந்தார். பிராமி, கிரந்தம், தமிழ் என அனைத்து எழுத்துமுறை கல்வெட்டுகளைப் படித்து ஆராயும் திறன் பெற்றார். கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளையும் கற்றறிந்திருந்தார். இந்து சமய வரலாற்றாளர்கள் அதிகம் கவனம் செலுத்தாத சமண, புத்த சமய கோயில்களையும் தொல்லியல் களங்களையும் ஆய்வு செய்தார். இரு முறை (1963-64) சென்னைத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2][3][4]

வேங்கடசாமியின் தமிழ்ப்பணியைப் பாரதிதாசன் பின்வருமாறு பாராட்டியுள்ளார்:

தமிழையே வணிகமாக்கித்
தன்வீடும் மக்கள் சுற்றம்
தமிழிலே பிழைப்பதற்கும்
தலைமுறை தலைமுறைக்குத்
தமிழ் முதலாக்கிக் கொண்ட
பல்கலைத் தலைவன் எல்லாம்
தமிழ்ச் சீனி வேங்கடத்தின்
கால்தூசும் பெறாதார் என்பேன்”

2000-ஆம் ஆண்டு தமிழக அரசு சீனி. வேங்கடசாமியின் நூல்களை நாட்டுடைமையாக்கியது.[5]

படைப்புகள் தொகு

நூல்கள் தொகு

1936 - கிறித்தவமும் தமிழும்
1940 - பௌத்தமும் தமிழும்
1943 - இசைத் திருமணம் (சீவக சிந்தாமணியில் காணப்படும் இசைக் கூறுகள் பற்றிய சிறு நூல்)
1944 - இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி - சிறுநூல்
1950 - மத்த விலாசம் - மொழிபெயர்ப்பு - சிறுநூல்
- மகாபலிபுரத்து ஜைன சிற்பம்
1952 - பௌத்தக்கதைகள்
1954 - சமணமும் தமிழும் (முதற்பகுதி)
1955 - மகேந்திரவர்மன் - மயிலை நேமிநாதர் பதிகம் - மயிலாப்பூர் வரலாறு
1956 - கௌதம புத்தர்
- தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
1957 - வாதாபி கொண்ட நரசிம்மவர்மன்
1958 - அஞ்சிறைத் தும்பி (சொல் ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
- மூன்றாம் நந்திவர்மன்
1959 - மறைந்துபோன தமிழ் நூல்கள்
- சாசனச் செய்யுள் மஞ்சரி
1960 - புத்தர் ஜாதகக் கதைகள்
1961 - மனோன்மணியம் - பதிப்பு
1962 - பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்
1965 - உணவுநூல்
1966 - துளு நாட்டு வரலாறு (கி.பி. 2ஆம் நூற்றாண்டு)
- சமயங்கள் வளர்த்த தமிழ் (கட்டுரைத் தொகுதி)
1967 - இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்[6]
- நுண்கலைகள்
1970 - சங்க கால தமிழக வரலாற்றில் சில செய்திகள்
1974 - பழங்காலத் தமிழ் வாணிகம் (சங்க காலம்)
- கொங்கு நாட்டு வரலாறு (பழங்காலம் கி.பி.250 வரையில்)
1976 - களப்பிரர் ஆட்சியில் தமிழகம்
1977 - இசைவாணர் கதைகள்
1981 - சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டுழுத்துக்கள்
1983 - தமிழ்நாட்டு வரலாறு (சங்க காலம் - அரசியல்) (இயல்கள் 4,5,6,10 மட்டும்)

கட்டுரைகள் தொகு

1923 - கொடுங்காற்று, லஷ்மி.
1926 - ஆசார சீர்திருத்தம். லஷ்மி. 4:1.
- தமிழாசிரிய மாணவர் வழிமுறை விளக்கம், பகுதி 1, செந்தமிழ்ச் செல்வி
1927 - காலக்குறிப்பு. லக்ஷ்மி , 4:7
- இயற்கைப் பொருணுணூற் கடலின் ஒரு சிறுதுளி, லஷ்மி
- வெண்பா - நூற்கள், லஷ்மி
- தமிழ்நாட்டின் தொன்மை. லக்ஷ்மி
1931 - கிரேக்கக் கவி ஹோமரும் கவிச்சக்ரவர்த்தி கம்பரும், குடியரசு, மே
- ஆண் பெண் சமத்துவம், குடியரசு, மே
- சைவ சாப்பாடு அல்லது மரக்கறி உணவு, குடியரசு, மே
- மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள், குடியரசு, ஜூன்
- தேசிய பாடல்கள், குடியரசு, ஜூன்
('மாமிச உணவைப் பற்றிய சில குறிப்புகள்' என்பதற்கு மறுப்பு) (எ.கப்பையா) குடியரசு, ஆகஸ்டு
- இந்தியாவின் பொது பாஷை இங்கிலீஷா? ஹிந்தியா?, குடியரசு ஆகஸ்டு
- மாமிச உணவைப் பற்றிய தடைக்கு விடை, குடியரசு, செப்டம்பர்
- வைட்டமின் (Vitamin) என்னும் ஜீவ சத்துப் பொருள். குடியரசு, நவம்பர்
1932 - சாமிகள் இனி அவதாரம் செய்ய முடியுமா? குடியரசு, ஏப்ரல்
- இந்துக்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடுவது ஏன்? குடியரசு. ஏப்ரல்
- 55 வயதில் குழந்தை பெறுதல், குடியரசு, அக்டோபர்
1933 - தேவாரத்தில் திருக்குறள். 'செந்தமிழ்ச்செல்வி', 13:10
1934 - வைட்டமின் (உடலுக்கு உரம் அளிக்கும் உணவுச் சத்து), ஊழியன், ஆகஸ்டு
1935 - நெய்க்குடத்தில் கை விடுதல், ஊழியன், ஜூன்
- பிளெச்சரிஸம் (Fletcherism), ஊழியன், ஜூன்
1937 - கிறீன் வைத்தியர் Samuel Fisk Green, செந்தமிழ்ச்செல்வி, 15:6
1938 - நந்தியார், செந்தமிழ்ச் செல்லி, சிலம்பு 16:6
- நீலகண்டனார், கலைக்கோட்டுத் தண்டனார், செந்தமிழ்ச்செல்வி, 16
- மலையாள மொழி, (மொழிபெயர்ப்புக் கட்டுரை, மலையாளவிருது) செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 16:8
1947 - பழஞ்செய்திகள், செந்தமிழ்ச் செல்வி 22:7
- அத்தரி, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- உதிரப்பட்டி, செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
- உரையூரழிந்த வரலாறு, செந்தமிழ்ச்செல்வி, 22:11
- யாரால் மழைபெய்கிறது? செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22
1948 - சென்னை நகரம் யாருக்கு உரியது? செந்தமிழ்செல்வி, சிலம்பு 23
- இராவணன் ஆண்ட இலங்கை எது? செந்தமிழ்ச்செல்வி, 23:3
- திருவள்ளுவர் கூறிய பொருட் செல்வம், செந்தமிழ்ச்செல்லி, 23:11
- தமிழ் நூல்களில் மீன்வகை, செந்தமிழ்ச்செல்வி, 22:7
- கழுதை ஏர் உழவர், செந்தமிழ்ச்செல்வி, 23:1
- பண்டைக்காலத்து எழுது கருவிகள், செந்தமிழ்ச்செல்வி, 23:4
- விபுலானந்த அடிகள் - வரலாற்றுக் குறிப்பு, ஈழமணிமலர், 1:2
1949 - வசுந்த குக மாகர மாத்திரை, செந்தமிழ்ச்செல்வி. 25 (ஓலைச்சுவடியிலிருந்து புதுப்பித்து எழுதப்பட்ட கவி வெண்பா - மருந்து செய்முறை குறித்தது )
- மணிபல்லவம் - ஜம்புகொல பட்டினம், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- நகில்குறைத்தல் - வரலாற்றுக் குறிப்பு, செந்தமிழ்ச்செல்வி, 24:3
- கடவுள் - முனிவர் - தெய்வம், செந்தமிழ்ச்செல்வி, 24:8
1950 - யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
- எழுத்து ஆக்கம், செந்தமிழ்ச்செல்லி, 25:7
- சங்க காலத்து மதுரை, செந்தமிழ்ச்செல்வி, 25:3
- நான் கண்ட பெருந்தமிழன், செந்தமிழ்ச்செல்வி, (மறைமலையடிகள் குறித்தது) 25
- யானை உரித்த பெருமான், செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 25
1952 - செந்தமிழ்சிந்தாமணி - கால ஆராய்ச்சி, சீவக சிந்தாமனி சொற்பொழிவு நினைவு மலர் - ஜைனத் தமிழ் இலக்கிய மன்றம், காஞ்சிபுரம்.
1953 - கன்னடமும் தமிழும், செந்தமிழ்ச்செல்வி, 28:8
- மறைவுற்ற தமிழ் நூல்கள், செந்தமிழ்ச்செல்வி (தொடர்ச்சியாக சிலம்பு 28 முதல் 10 இதழ்களுக்கு மேல் வெளிவந்துள்ளது. இக்கட்டுரை இதுவே பின்னர் மறைந்துபோன தமிழ் நூல்கள். என நூலாக வெளிவந்தது. 25:7
1956 - பௌத்த சமயம், மதுரைத் தமிழ்ச் சங்கப் பொன்விழா மலர்.
- தமிழ்நாட்டுச் சிற்பக்கலைகள், தமிழ் இலக்கியக்கோவை - ஐந்தாம் படிவம் (பாடநூல்), திருநெல்வேலி டயோச்சன் புக்டெப்போ, பாளையங்கோட்டை (1953 - செந்தமிழ்ச்செல்வி சிலம்பு 28 இல் வெளிவந்த கட்டுரை)
- கூவத்துப் பௌத்த சிந்தனைகள், கலைக்கதிர், புத்தர் மலர், 8:6
1957 - பாவாடை, சென்னை மாணவர் மன்றம் வெள்ளிவிழா மலர்.
1958 - தமிழில் பிறமொழிச் சொற்கள், பாரதி - தமிழ் எழுத்தாளர் ஆறாவது மாநாட்டு மலர்.
- தேனவரை நாயனார் சாசனம். தமிழ்ப்பொழில், 34:11
- வருணன் வணக்கம், தமிழ்ப் பொழில், 34:3
- உன் மகள், கி.ஆ.பெ.மணிவிழாமலர்
- ஜைன மதமும் திருக்குறளும்
- சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம், தமிழ்ப்பொழில், 35:2
- பத்தினிச் செய்யுளும் கண்ணகியும், தமிழ்ப்பொழில், 35:6
- திருமாவுண்ணி கண்ணகியா? கலைக்கதிர், 9:11
- பஞ்ச சீலம், கலைக்கதிர் - பொங்கல் மலர்
- பாண்டியர் நிறுவிய தமிழ்ச்சங்கம், கலைக்கதிர், 1:1 சனவரி
- சேரலாதன் அளித்த பெருஞ்சோறு, தமிழ்ப்பொழில், 36: 4-5
- சிலப்பதிகாரமும் பங்களரும், கலைக்கதிர், 11:8 ஆகஸ்டு
- உண்மைப்பொருள், கலைக்கதிர், 11:10 அக்டோபர்
- பாமரர் பகர்ச்சி. நண்பன் ஆகஸ்டு: மலர் 7
- நடைவாவி, நண்பன், மலர் :3
- சிற்பக்கலையில் தாமரை, நண்பன், மலர் 5.
- கோழிப்பாம்பு. நண்பன், மலர் 6
- அடிமை வாழ்வு, நண்பன், மலர் 8
1960 - பௌத்த குட்டன், கலைக்கதிர்
- ‘மெய்’ என்னும் சொல் ஆராய்ச்சி, தமிழ்ப்பொழில், 36:4
- ஆல்நீர், ‘கலைக்கதிர்’, செப்டம்பர்.
1961 - மதுரைக் காஞ்சியின் காலம், இரா.பி. சேதுப்பிள்ளை வெள்ளிவிழா மலர்
- எழினி - யவனிகா, Tamil Culture vol.IX
- கொங்கு நாட்டில் பிராமி எழுத்துக்கள், செந்தமிழ்ச்செல்வி. சிலம்பு:35
- சிறுபாணன் சென்ற வழி, Tamil Culture vol.IX
- தமிழ் நாட்டில் யவனர், கலைக்கதிர், பிப்ரவரி.
- சைவ வைணவ பௌத்த சமண சிற்பங்கள், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக 1008 ஆவது நூல் வெளியீட்டு விழா மலர்.
- சேரநாட்டு முத்து, தெ.பொ.மீ. மணிவிழா மலர், மார்ச்.
1962 - அவையடக்கம், தென்றல், பொங்கல்மலர்.
- தொல்காப்பிய ஆராய்ச்சிக் காரர்கள். செந்தமிழ்ச்செல்வி, 36:2
- துளுமொழியும் தமிழ் மொழியும், கலைக்கதிர் பொங்கல் மலர்.
1963 - கண்ணன் பிறந்த மாட்சி (கவிதை). (மலையாளக் கவிதையைத்தழுவி எழுதியது. பாரதி. - தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர்.
- பௌத்த மதமும் திருக்குறளும், செந்தமிழ் 63:5
- சைவ சமய வரலாறு. ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரச் சத்திரம் நூற்றாண்டு விழா மலர்.
- ஒல்லாந்து தேசம், Recreation Club, Third Anniversary.
1964 - இந்தியால் தமிழ் கெடுமா?, முரசொலி, பொங்கல் மலர்.
- தமிழ் எழுத்தாளர் சங்க 12 ஆவது மாநாடு - தலைமையுரை, ‘பாரதி’, தமிழ் எழுதாளர் சங்கம், சென்னை .
1965 - முத்தமிழ் வள்ளல், நகரத்தார் மாநில மாநாட்டு மலர்,
- கம்பரும் சாளமும்
1966 - சங்க காலத்துப் பாண்டிய அரசனின் பிராமி எழுத்துச் சாசனம், கல்வி, டிசம்பர்.
- வன பண்டித ஹிஸ்ஸென்லெ தருமரதன தெரோ, ‘பாரதி’14 ஆவது தமிழ் எழுத்தாளர் மாநாடு சிறப்பிதழ்.
- நற்பண்பாளர், குத்தூசி குருசாமி நினைவுமலர், சென்னை .
- சேரன் செங்குட்டுவன் AOR vol.XXI, part 1, University of Madras.
- கல்லாடனார், சுடர், பாரதிதாசன் மலர், 15 தில்லித் தமிழ்ச்சங்கம்.
1967 - பௌத்த சமணத் தமிழிலக்கியங்கள், தமிழ் வட்டம் முதலாம் ஆண்டு
1968 - சிவன் திருமால் உருவ அமைப்பு, புலவர்குழு வெளியீடு: திருச்சி.
- பௌத்தர் வளர்த்த தமிழ். உலகத் தமிழ் மாநாடு - விழா மலர்
- வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், 10:12
- மாதவி: காவிரிப்பூம் பட்டினத்தின் கலைச்செல்வி, பெங்களூர்த் தமிழ்ச்சங்கச் சிறப்பு மலர்.
- தேவநந்தி - கண்ணகியின் தோழி, சென்னை இளைஞர் கழக இரவு உயர்நிலைப்பள்ளி - பொன்விழாமலர்.
- முப்புரம் எரித்த முதல்வன். திருக்கோயில், 10:10 ஜூலை
- வரகுண பாண்டியனின் கல்வெட்டு, திருக்கோயில், செப்டம்பர்.
- வரகுண பாண்டியனின் திருத்தொண்டுகள், திருக்கோயில். அக்டோபர்.
1969 - இளங்கோ அடிகளின் கவிதை நயம், தமிழ்வட்டம் இரண்டாவது ஆண்டு மலர்.
- மணிமேகலையில் முரண்பட்ட செய்தியா? தமிழ்ப்பொழில், 35:3
- திருமெழுக்குப்புரம், திருக்கோயில், சனவரி.
- சங்க காலத்து நடுகற்கள், ஆராய்ச்சி, மலர் 1.
1970 - இலிங்கோத்பவ மூர்த்தம், இராமலிங்கர் பணிமன்ற முத்திங்களிதழ். 3:12
- திருக்காரிக்கரை, திருக்கோயில், மார்ச்.
- திருவக்கரை, திருக்கோயில், மே
- சங்க காலத்து வாணிகம், ஆராய்ச்சி, மலர்2
- மறைந்துபோன மருகூர்ப்பட்டினம், இரண்டாவது உலகத்தமிழ் கருத்தரங்க நிகழ்ச்சிகள், தொகுதி III.
1971 - ஆரியப்படை கடந்த, அரசு கட்டிலில் துஞ்சியபாண்டியன் நெடுஞ்செழியன், செந்தமிழ்ச்செல்வி. 46:6
- சங்க காலத்துக் கைத்தொழிலும் வாணிகமும், ஆராய்ச்சி, மலர்:3
- திருவிளையாடற் புராணத்தில் பௌத்த கதைகள், தில்லி தமிழ்ச்சங்க வெள்ளிவிழா மலர்.
- மாநாய்கனும் மாசாத்துவானும், செந்தமிழ்ச்செல்வி, 46:1
- தொறு என்னும் சொல்லின் வரலாறு, மூன்றாவது உலகத் தமிழ்க் கருத்தரங்கு நிகழ்ச்சி, தொகுதி III
1972 - சங்கநிதி பதுமநிதி, சிதம்பரம் ஸ்ரீ சிவகாமி அம்பாள் திருக்கோயி திருக்கும்பாபிஷேக மலர்.
- காவியப் புலவரும் ஓவியக் கலைஞரும். ஆராய்ச்சி, 3:2
- சொல் ஆராய்ச்சி, செந்தமிழ்ச்செல்லி. 46:9
- சிலப்பதிகார ஆய்வுரை, செந்தமிழ்ச்செல்வி. 46:2
1973 - மணிமேகலையின் விண்விழிச் செலவு. தமிழ்ப்பொழில் மணிவிழா மலர், கரந்தைத் தமிழ்ச் சங்கம்.
- வையாவி நாட்டுச் சங்க காலத்து அரசர்கள், பழனி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா சிறப்பு மலர்.
- கண்ணகியார் தெய்வமான இடம் எது? வ. சுப்பையா பவழவிழா மலர்.
- நல்ல சிற்றம்பலமும் தில்லைச் சிற்றம்பலமும், திருக்கோயில், 15:6
1974 - இலக்கியத்தில் நடு கற்கள், வீரர்கள் நடுகற்கள் Hero stones குறித்த கருத்தரங்கக் கட்டுரைத் தொகுப்பு-தொல்லியல்துறை, தமிழக அரசு.
- தேசிகப் பாவை, முக்குடை.
- கங்காதர மூர்த்தியின் அரியதொரு சிற்ப வடிவம், Journal of Tamil Studies vol.5
- திருக்குறளில் பௌத்தமும் சமணமும், திருக்குறள் கருத்தரங்கு மலர். திருவேங்கடவன் பல்கலைக்கழகம், திருப்பதி.
1975 - கவிமணிக்கு அஞ்சலி, கவிமணி மலர்.
- தமிழ் அகம், Joumal of Tamil Studies, vol.III (இக்கட்டுரை செந்தமிழ்ச்செல்வி, சிலம்பு 22லும் வெளிவந்துள்ளது.)
- நாய்வேடம் கொண்ட நம்பன், கொங்கு. 5:12
1976 - இளங்கோவும் சந்தனமும், மணிமேகலை மன்றம் விழா மலர்.
- வஞ்சிக்கருவூர்: சங்க காலச் சோழ நாட்டின் தலைநகரம், <Journialor Tamil Studies:9
1978 - ஒரு குறளுக்கு பௌத்த விரிவுரை, தமிழ் ஆராய்ச்சியின் எல்லைகள், பேரா.நா.வா.மணிவிழா மலர்.
- காவியப் புலவரின் சொல்லோவியம், செந்தமிழ்ச் செல்வி, 52:4
- சீறாவின் காப்பியல் பண்புகள், சிந்திக்கினிய சீறா, பீராஃபௌண்டேஷன், சென்னை.
1980 - தமிழ்நாட்டு ஜைன சிற்பங்களும் ஓவியங்களும், முக்குடை.

குறிப்புகள் தொகு

  1. இவரது பெயர் சில தரவுகளில் மயிலை சீனி. வெங்கடசாமி என்றும் எழுத்துக்கூட்டப்பட்டுள்ளது
  2. Mohan Lal (1 January 2006). The Encyclopaedia Of Indian Literature (Volume Five Sasay To Zorgot). Sahitya Akademi. பக். 3900–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-260-1221-3. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&pg=PA3900. பார்த்த நாள்: 17 March 2012. 
  3. Kamil Zvelebil (1992). Companion studies to the history of Tamil literature. BRILL. பக். 47–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-09365-2. https://books.google.com/books?id=qAPtq49DZfoC&pg=PA47. பார்த்த நாள்: 17 March 2012. 
  4. Jayaraman, Bagavathi. "Mayilai Seeni. Venkatasami's Contribution to Tamil Studies" (PDF). Journal of Tamil Studies. Archived from the original (PDF) on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "TN Govt Budget 2002-03". Govt of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 28 April 2012.
  6. இறைவன் ஆடிய எழுவகைத் தாண்டவம்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மயிலை_சீனி._வேங்கடசாமி&oldid=3772032" இலிருந்து மீள்விக்கப்பட்டது