மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம்
மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (Machilipatnam Urban Development Authority) இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு சிறப்பு நகர்ப்புற திட்டமிடல் ஆணையமாகும்.[1] 2016 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் முதல் தேதியன்று ஆந்திரப் பிரதேச நகர்ப்புறங்கள் (வளர்ச்சி) சட்டம் 1975 இன் கீழ் உருவாக்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தின் கிருட்டிணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிப்பட்டினத்தில் இதன் தலைமையகம் அமைந்துள்ளது.[2]
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 1 பிப்ரவரி 2016 |
வகை | நகர்ப்புற திட்டமிடல் முகமை |
ஆட்சி எல்லை | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையகம் | மச்சிலிப்பட்டணம் 16°10′N 81°08′E / 16.17°N 81.13°E |
அதிகார வரம்பு தொகு
மச்சிலிப்பட்டினம் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் 426.16 சதுரகிலோமீட்டர் (164.54 சதுர மைல்) பரப்பளவை உள்ளடக்கியுள்ளதுந. மச்சிலிப்பட்டினம் நகராட்சி ஆணையம், மச்சிலிப்பட்டினம் மண்டலத்தைச் சேற்ந்த 27 கிராமங்கள் மற்றும் பெடனா மண்டலத்திலிருந்து ஒரு தனி கிராமம் ஆகியவை இதில் இடம்பெற்றுள்ளன.[2]
மேற்கோள்கள் தொகு
- ↑ "DTCP - Andhra Pradesh". www.dtcp.ap.gov.in. Archived from the original on 4 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 November 2016.
- ↑ 2.0 2.1 "State constitutes Machilipatnam Area Development Authority". Machilipatnam. 2 February 2016. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/state-constitutes--development-authority/article8182135.ece?ref=tpnews. பார்த்த நாள்: 4 February 2016.