மரீ பிரான்சுவா சாடி கார்னோ
பிரெஞ்சு இயற்பியலாளர் பற்றி அறிய சாடி கார்னோ கட்டுரையைப் பார்க்கவும்.
மரீ பிரான்சுவா சாடி கார்னோ Marie François Sadi Carnot | |
---|---|
![]() | |
பிரெஞ்சுக் குடியரசின் 5வது அதிபர் அண்டோராவின் இளவரசர் | |
பதவியில் டிசம்பர் 3, 1887 – ஜூன் 25, 1894 | |
முன்னவர் | ஜூல்ஸ் கிறேவி |
பின்வந்தவர் | சான் காசிமிர்-பெரேயர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஆகத்து 11, 1837 பிரான்ஸ் |
இறப்பு | சூன் 25, 1894 லீயோன், பிரான்ஸ் | (அகவை 56)
தேசியம் | பிரெஞ்சு |
அரசியல் கட்சி | இடதுசாரி ரிப்பப்ளிக்கன் |
மரீ பிரான்சுவா சாடி கார்னோ (Marie François Sadi Carnot; ஆகஸ்ட் 11, 1837 – ஜூன் 25, 1894) பிரான்சின் அரசியல்வாதியும் மூன்றாம் பிரெஞ்சுக் குடியரசின் நான்காம் அரசுத் தலைவரும் ஆவார். 1887 முதல் 1894 வரையில் படுகொலை செய்யப்படும் வரையில் பிரெஞ்சு அதிபராக இருந்தார்.
ஜூன் 24, 1894 இல் லியோன் என்ற இடத்தில் ஒரு பொது மேடையில் உரையாற்றும் போது "சான்டெ கசேரியோ" என்ற இத்தாலிய அரசு எதிர்ப்பாளன் ஒருவனால் குத்திப் படுகாயமடைந்து அன்று நள்ளிரவுக்குச் சற்றுப் பின்னர் இறந்தார்.